"அடேய் 'மாப்பிள்ளை'ங்களா,,.. சீக்கிரமா வாங்க..." 'வெறி' மோடில் ரசிகர்கள்... இனி இருக்கு எங்க 'ஆட்டம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியிருந்த நிலையில், தங்களது அடுத்த இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளிடம் தோல்வியைத் தழுவியது.

"அடேய் 'மாப்பிள்ளை'ங்களா,,.. சீக்கிரமா வாங்க..." 'வெறி' மோடில் ரசிகர்கள்... இனி இருக்கு எங்க 'ஆட்டம்'!!!

தாங்கள் தோல்வியடைந்த இரண்டு போட்டிகளிலும் இலக்கை எட்டக் கூட முயற்சி செய்யாமல் ஆடியதாக சென்னை ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். அதே போல சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் விஜய்யின் பேட்டிங், சுழற்பந்து வீச்சு ஆகியவை மிகப் பெரும் விமர்சனத்துக்குள் ஆகியுள்ளது.

அவரை அடுத்த போட்டிகளில் களமிறக்க வேண்டாம் எனவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். சென்னை அணியின் நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் இந்த தொடர் முழுவதிலும் இருந்து விலகியது மிகப்பெரிய பின்னடைவாகும். அதே போல, மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு காரணமாக இருந்த ராயுடுவும் அடுத்த இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. ஆல் ரவுண்டர் பிராவோவும் காயம் காரணமாக, இதுவரை ஆடவில்லை.

இந்த ஐபிஎல் தொடரில் மிக மோசமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் கருதப்பட்டு வரும் நிலையில், அடுத்து நடைபெறும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியில் பிராவோ மற்றும் ராயுடு ஆகியோர் ஆட தகுதியுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலால் சென்னை அணி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ளனர். சென்னை அணி மிகவும் மோசமான பார்மில் உள்ள நிலையில், பிராவோ ராயுடு ஆகியோர் திரும்பி வருவது சென்னை அணிக்கும், சென்னை ரசிகர்களுக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்