‘இனி அவர் விளையாடுறது டவுட் தான்?’.. சோகத்தில் உள்ள CSK ரசிகர்களுக்கு இடியாய் வந்த புது தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘இனி அவர் விளையாடுறது டவுட் தான்?’.. சோகத்தில் உள்ள CSK ரசிகர்களுக்கு இடியாய் வந்த புது தகவல்..!

வேற டீமுக்கு போனாலும் பழச மறக்காத டு பிளசிஸ்.. சிஎஸ்கே வீரர்களை பார்த்ததும் செய்த செயல்..!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய முதல் 3 போட்டிகளில் தோல்விகளை சந்தித்தது. இதனை அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி மீண்டு வரும் என ரசிகர்கள் நம்பினர். ஆனால் 4-வது முறையும் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

சென்னை அணியின் இந்த தோல்விகளுக்கு பந்து வீச்சாளரான தீபக் சஹார் இல்லாதது தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தீபக் சஹாரால் விளையாட முடியவில்லை. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் வலைப்பயிற்சியை தொடங்கிய அவர், ஏப்ரல் இறுதிக்குள் சிஎஸ்கே அணியில் இணைந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Big blow for CSK, Deepak Chahar suffers another injury

இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தீபக் சஹாருக்கு முதுகுப்பகுதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 2 காயங்கள் ஏற்பட்டுவிட்டதால் அவர் இனி இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது மிகக்கடினம் என சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடரின் பாதியிலாவது இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீபக் சஹாருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டது சிஎஸ்கே ரசிகரகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் இன்று (12.04.2022) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது. ஏற்கனவே 4 போட்டிகளில் தொடர் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் உள்ளது. அதனால் இப்போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஒரு சீனியர் ப்ளேயர் கிட்ட இப்படி நடந்துப்பீங்க’.. ஹர்திக் பாண்ட்யா செய்த செயல்.. விட்டு விளாசும் நெட்டிசன்கள்..!

CRICKET, IPL, IPL 2022, CSK, DEEPAK CHAHAR, சிஎஸ்கே, ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

மற்ற செய்திகள்