Vilangu Others

புவனேஷ்வர் செய்த தவறு.. கோபத்தில் பந்தை உதைத்து.. தீட்டித் தீர்த்த ரோஹித்.. காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான கிரிக்கெட் தொடர், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

புவனேஷ்வர் செய்த தவறு.. கோபத்தில் பந்தை உதைத்து.. தீட்டித் தீர்த்த ரோஹித்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில்.. விராட் கோலி பேனர்.. "அதுல போட்டிருந்த அந்த ஒரு லைன் தான் ஹைலைட்டே"

ஒரு நாள் தொடரை, இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியிருந்தது. தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் டி 20 தொடரையும், இந்திய அணியே கைப்பற்றி அசத்தியுள்ளது.

இன்னும் ஒரே ஒரு டி 20 போட்டி மட்டும் மீதமுள்ள நிலையில், ஆறுதல் வெற்றி பெறும் முயற்சியில், நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணி முனைப்பு காட்டும். அதே வேளையில், ஒரு நாள் தொடரை போல, டி 20 தொடரிலும், வெஸ்ட் இண்டீஸ் அணியை வொயிட் வாஷ் செய்ய, இந்திய அணி தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

பெஸ்ட் கேப்டன் ரோஹித்

முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் முதல், இந்திய அணியின் குறைந்த ஓவர் போட்டிகளில், புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் தொடரில், அவரது கேப்டன்சி அதிகம் பாராட்டினைப் பெற்றிருந்தது. தொடர்ந்து, டி 20 தொடரிலும், அணியின் பீல்டிங் செட்அப் மற்றும் பவுலிங் ரொட்டேஷன் என அனைத்திலும் தேர்ந்த கேப்டனாக ரோஹித் செயல்பட்டு வருகிறார்.

bhuvi did mistake in 2nd t20 rohit sharma reacts

வீரர்களிடம் ஸ்ட்ரிக்ட்

அணியை சிறப்பாக வழி நடத்தி வரும் ரோஹித் ஷர்மா, தன்னுடைய வீரர்களிடம் கண்டிப்பாக இருக்கவும் தவறுவதில்லை. கடந்த ஒரு நாள் தொடரில், சாஹல், ஷர்துல் ஆகியோரிடம் கோபமாக ரோஹித் கத்திப் பேசும் வீடியோக்கள் அதிகம் வைரலாகி இருந்தது. அந்த வகையில், நேற்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியிலும், ரோஹித் சர்மா கோபப்பட்ட வீடியோ ஒன்று தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பரபரப்பு

இந்திய அணி நிர்ணயித்த 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி, வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடிய போது, அந்த அணி வீரர்கள், போவெல் மற்றும் பூரன் ஆகியோர் அதிரடி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். இதனால், எந்த அணி வெற்றி பெறும் என்ற பரபரப்பு நீடித்துக் கொண்டிருந்தது.

bhuvi did mistake in 2nd t20 rohit sharma reacts

மிஸ்ஸான கேட்ச்

இந்நிலையில், 16 ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அப்போது பந்தினை எதிர்கொண்ட போவெல், வேகமாக அடிக்க, பந்து சரியாக பேட்டில் படாமல், எட்ஜாகி  நேராக மேலே உயர்ந்தது. இதனால், போவெல் அவுட்டாக ஒரு வாய்ப்பு  உருவானது. ஆனால், நேராக கைக்கு வந்த கேட்சினை புவனேஷ்வர் குமார் தவற விட்டார்.

பந்தினை உதைத்த ரோஹித்

அப்போது, அவர் அருகே இருந்த கேப்டன் ரோஹித் ஷர்மா, கேட்ச் வாய்ப்பை தவற விட்டதால், விரக்தி அடைந்து, பந்தினை கோபத்தில் உதைத்துத் தள்ளினார். தொடர்ந்து, கோபத்தில் சில வார்த்தைகளையும்  அவர் பேசினார். இதற்கு மத்தியல், வெஸ்ட் இண்டீஸ் அணி ரன் ஓடி எடுத்தும் விட்டனர். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

bhuvi did mistake in 2nd t20 rohit sharma reacts

வெஸ்ட் இண்டீஸ் பக்கமும் வெற்றி இருந்த நிலையில், 19 ஆவது ஓவரை சிறப்பாக வீசிய புவனேஷ்வர் குமார், இந்திய அணி வெற்றி பெற காரணமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரோஹித்'த அவ்ளோ சாதாரணமா நெனச்சுட்டடீங்களா பொல்லார்ட்?.. கேப்டனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 'கோலி'

BHUVI, T20MATCH, ROHIT SHARMA, புவனேஷ்வர், ரோஹித், வெஸ்ட் இண்டீஸ்

மற்ற செய்திகள்