பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு திடீர் உடல்நலக்குறைவு.. கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு திடீர் உடல்நலக்குறைவு.. கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருக்கும் போது சவுரவ் கங்குலிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனாலும் கங்குலிக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அவரது உடல்நலம் குறித்த முழு தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்