'2 இந்திய அணியை உருவாக்கியது 'இது'க்காக தான்'!.. பின்னணியில் இவ்வளவு பெரிய வியூகமா?.. பிசிசிஐ பக்கா ப்ளான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை தொடருக்காக மெகா இந்திய அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

'2 இந்திய அணியை உருவாக்கியது 'இது'க்காக தான்'!.. பின்னணியில் இவ்வளவு பெரிய வியூகமா?.. பிசிசிஐ பக்கா ப்ளான்!

இந்திய அணி தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14 தேதி வரை நடக்கிறது. மேலும், இரண்டாவதாக ஒரு இந்திய அணி உருவாக்கப்பட்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் அனுப்பப்படவுள்ளது. 

இந்நிலையில், இந்த தொடருக்கான அட்டவணை இன்று வெளியானது. அதன்படி, இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் ஜூலை 13ம் தேதி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும், டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சுற்றுப்பயணத்திற்காக சாதாரண அணியை உருவாக்காமல் 24 பேர் கொண்ட மெகா அணியாக உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அந்த வியூகத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெறாத வீரர்கள், டி20 தொடரில் வாய்ப்பு பெறுவார்கள். இதற்கிடையே, வீரர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 24 வீரர்களின் செயல்பாடுகளை வைத்து டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணியை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. 

இளம் வீரர்கள் அடங்கிய இந்த அணியை ஷிகர் தவான் தலைமை தாங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றிருப்பதால், இலங்கை தொடருக்கான அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

 

மற்ற செய்திகள்