இதை நோட் பண்ணீங்களா..! இந்திய அணியில் இருக்கும் ‘மிகப்பெரிய’ பிரச்சனை.. இப்படி இருந்தா யார் வேணாலும் ‘ஈசியா’ தோக்கடிச்சிருவாங்க.. முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் இருக்கும் முக்கிய பிரச்சனையை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதை நோட் பண்ணீங்களா..! இந்திய அணியில் இருக்கும் ‘மிகப்பெரிய’ பிரச்சனை.. இப்படி இருந்தா யார் வேணாலும் ‘ஈசியா’ தோக்கடிச்சிருவாங்க.. முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் நடைபெற்று வருகிறது. நாளை (23.10.2021) முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்க உள்ளன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (24.10.2021) துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Anyone can upset India in knockouts, says Nasser Hussain

அதேபோல் இந்த முறை எந்த அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் பலரும் இந்திய அணிதான் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளனர். இந்த நிலையில், இந்திய அணியில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் நாசர் ஹுசைன் (Nasser Hussain) கூறியுள்ளார்.

Anyone can upset India in knockouts, says Nasser Hussain

அதில், ‘எல்லாரும் கூறுவதுபோல் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால் இது டி20 போட்டி, என்னவேண்டுமானாலும் நடக்கும். ஒரு வீரரால் கூட ஆட்டத்தை மாற்ற முடியும். ஒரே ஓவரில் ஆட்டத்தின் முடிவை மாற்ற முடியும். குறிப்பாக நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவை எந்த அணி வேண்டுமானாலும் எளிதாக தோற்கடித்து விட வாய்ப்புள்ளது.

Anyone can upset India in knockouts, says Nasser Hussain

ஏனென்றால் இந்தியா எவ்வளவு சிறப்பாக விளையாடினாலும், நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவதை பார்த்துள்ளோம். உதாரணத்துக்கு, நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியா இறுதிப்போட்டி வரை சென்றது. கடைசி வரை இந்தியாவின் பக்கமே ஆட்டம் இருந்தது. ஆனால் திடீரென ஒரு குறைந்த இலக்கை சேசிங் செய்யும் போட்டியாக அது மாறிவிட்டது.

Anyone can upset India in knockouts, says Nasser Hussain

இந்தியாவிடம் பிளான் பி என்பதே இல்லை. ஒரே ஒரு திட்டத்தை வைத்துக்கொண்டு நாக் அவுட் போட்டி போன்ற முக்கியமான போட்டிகளில் களமிறங்குகின்றனர். அது சொதப்பிவிட்டால் வேறு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிவிடுகின்றனர்’ என நாசர் ஹுசைன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Anyone can upset India in knockouts, says Nasser Hussain

நாசர் ஹுசைன் கூறியதுபோலவே பல தொடர்களில் நாக் அவுட் சுற்றில் தோல்வி பெற்று இந்தியா வெளியேறியுள்ளது. குறிப்பாக 2015-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை, 2016-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை, 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி பெற்று இந்தியா வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்