Video : "யாரு சாமி இந்த பையன்?.. 'தோனி', 'ரெய்னா'வுக்கு கூட ஆட்டம் காட்டிட்டானே!" - 'பயிற்சி' ஆட்டத்தில் 'மாஸ்' காட்டிய 'இளம்' வீரர்.. மகிழ்ச்சியில் 'சிஎஸ்கே' ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் நாளை மறுநாள் ஆரம்பமாகவுள்ளதையடுத்து, அனைத்து அணிகளும் மிக தீவிரமாக தயாராகி வருகின்றன.

Video : "யாரு சாமி இந்த பையன்?.. 'தோனி', 'ரெய்னா'வுக்கு கூட ஆட்டம் காட்டிட்டானே!" - 'பயிற்சி' ஆட்டத்தில் 'மாஸ்' காட்டிய 'இளம்' வீரர்.. மகிழ்ச்சியில் 'சிஎஸ்கே' ரசிகர்கள்!!

இதில், தோனி தலைமயிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக, மிக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. 12 சீசன்களாக தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற பெருமையுடன் திகழ்ந்த சிஎஸ்கே, கடந்த சீசனில் பிளே ஆஃப்  சுற்றுக்கு முன்னேறாமல், 7 ஆவது இடம் பிடித்து வெளியேறியிருந்தது.

இதனால், தோனியின் கேப்டன்சி மற்றும் சீனியர் வீரர்களின் ஆட்டம் கடுமையான விமர்சனத்தை சந்தித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த முறை மீண்டும் சென்னை அணி, தங்களது பழைய ஃபார்மை நிரூபிக்கும் முயற்சியில் உள்ளது. ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம் உள்ளிட்ட வீரர்களையும் ஏலத்தில் அந்த அணி எடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னை அணிக்குள்ளேயே இரண்டு அணிகளாக பிரித்து, பயிற்சி போட்டிகளில் மோதியது. இதில், இளம் வீரர் ஒருவர், தோனி, ரெய்னா, டுபிளஸ்ஸி, மொயின் அலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து 20 வயது வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி (Fazalhaq Farooqi) என்பவரை வலைப் பந்து வீச்சாளராக நியமித்திருந்தது. மேலும், அணிக்குள்ளேயே நடைபெற்ற பயிற்சி போட்டியில் பந்து வீசிய பரூக்கி, தோனி, ரெய்னா உள்ளிட்ட வீரர்களுக்கு மிகச் சிறப்பாக பந்து வீசி அசத்தினார்.

அதுவும் அவர்களின் பலவீனத்தை புரிந்து கொண்டு, அதற்கேற்ப பந்துகளை வீசினார். அதே போல, டுபிளஸ்ஸி மற்றும் மொயின் அலி ஆகியோரும் பரூக்கியின் பந்தை முதலில் எதிர்கொள்ள சற்று சிரமப்பட்டனர்.

 

ஏற்கனவே, சென்னை அணியில் இடப்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக மாற்று வீரரை சென்னை அணி ஆலோசித்து வருகிறது. இதனால், பரூக்கியை ஹேசல்வுட்டின் மாற்று வீரராக சென்னை அணி களமிறக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

அப்படி களமிறங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்தால், நிச்சயம் பரூக்கி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்