'அவங்க இடத்துக்கே போய்... அவங்கள மிரள வச்சுடீங்க!'... 'இந்த தருணம் எங்களுக்கு எப்படி இருக்கு தெரியுமா!?'.. யார்க்கர் கிங் நடராஜனுக்கு... நடிகர் சிவகார்த்திகேயன் லவ்லி மெசேஜ்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பரா மைதானத்தில் நடைபெற்றது.

'அவங்க இடத்துக்கே போய்... அவங்கள மிரள வச்சுடீங்க!'... 'இந்த தருணம் எங்களுக்கு எப்படி இருக்கு தெரியுமா!?'.. யார்க்கர் கிங் நடராஜனுக்கு... நடிகர் சிவகார்த்திகேயன் லவ்லி மெசேஜ்!!

இந்த போட்டியில் தன்னுடைய முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை இந்தியாவுக்காக விளையாடினார் தமிழக வீரர் 'யார்க்கர்' ஸ்பெஷலிஸ்டான இடக்கை பந்துவீச்சாளர் தங்கராசு நடராஜன்.

தனது முதல் போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருக்கிறார். இந்நிலையில், நடராஜனை ட்விட்டரில் பாராட்டி உள்ளார் நடிகர் சிவர்கார்த்திகேயன்.

actor sivakarthikeyan wishes t natarajan debut match australia details

இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் குறிப்பிடுகையில்,"நல்ல முயற்சி எடுத்து விளையாடினீர்கள் சகோ. ஆஸ்திரேலிய மண்ணில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரா முதல் ஆட்டத்தை விளையாடியது அற்புதம். உங்களை இந்தியாவின் நீல நிற ஜெர்சியில் பார்ப்பதில் மகிழ்ச்சி. இது எங்கள் எல்லோருக்கும் பெருமையான தருணம். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையே, கிரிக்கெட் வீரர் நடராஜனின் இன்றைய போட்டி குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 

 

மற்ற செய்திகள்