'ஒரே நாளில் 2 சூப்பர் ஓவர்'.. மட்டுமில்ல.. 'இது' ‘அதுக்கும் மேல’.. ‘இணையத்தில்’ ட்ரெண்ட் ஆகும் ‘சண்டே’ ஐபிஎல் போட்டிகள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்று (அக்டோபர் 18,2020) ஒரே நாளில் 2 ஐபிஎல் போட்டிகளில் சூப்பர் ஓவர் அரங்கேறியுள்ளது.

'ஒரே நாளில் 2 சூப்பர் ஓவர்'.. மட்டுமில்ல.. 'இது' ‘அதுக்கும் மேல’.. ‘இணையத்தில்’ ட்ரெண்ட் ஆகும் ‘சண்டே’ ஐபிஎல் போட்டிகள்!

முன்னதாக ஆடிய ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியும் கடைசி 1 பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த சூழலில் ஹைதராபாத் அணி இருந்தபோது, அந்த அணி ஒரு ரன் எடுக்க, போட்டி சமனுக்கு வந்தது.

2 Super Over in a same day.. 2 super over in same match IPL2020

அதன் பின் நடந்த சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி வென்றது.

இதேபோல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து ஆடிய பஞ்சாப் அணியும் 2 ரன்கள் தேவைப்பட்டபோது 1 ரன் எடுத்ததால் போட்டி சமனுக்கு வந்தது. அதன் பின்னர் நடந்த சூப்பர் ஓவரிலும் போட்டி சமனுக்கு வந்ததால், 2வது சூப்பர்  ஓவர் நடந்தது. இதில் பஞ்சாப் அணி த்ரில்லாக வெற்றி பெற்றது. 

இப்படி ஒரே நாளில் 2 சூப்பர் ஓவர், அதிலும் இரண்டாவது சூப்பர் ஓவர் என இன்றைய ஐபிஎல் போட்டி த்ரில்லராகவும் திருப்பங்கள் நிறைந்ததாகவும் துபாயில் நடந்துள்ளது.

 

மற்ற செய்திகள்