கொரோனாவின் 'முக்கிய' அறிகுறி: சளி, இருமலை குணப்படுத்தும் 'வெற்றிலை' துளசி சூப்... தயாரிப்பது எப்படி?

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்
By |

கொரோனாவின் முக்கிய அறிகுறிகளாக திகழும் சளி, இருமலை கட்டுப்படுத்தும் வெற்றிலை துளசி சூப் தயாரிப்பது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.

கொரோனாவின் 'முக்கிய' அறிகுறி: சளி, இருமலை குணப்படுத்தும் 'வெற்றிலை' துளசி சூப்... தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

தண்ணீர் - 1 கப்

சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

மிளகு பொடி - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்

துளசி இலை - ஒரு கைப்பிடி அளவு

வெற்றிலை - 6 இலைகள்

தூதுவளை இலை - ஒரு கைப்பிடி அளவு

புளி கரைசல் - ஒரு டீஸ்பூன்

இஞ்சி - ஒரு துண்டு

தக்காளி - ஒன்று

சிவப்பு மிளகாய் - ஒன்று

உப்பு - தேவையான அளவு

செய்முறை

*துளசி, வெற்றிலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

*பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, சூடானவுடன், மஞ்சள் பொடி, துளசி இலை, வெற்றிலை, தூதுவளை இலை, புளி கரைசல், இஞ்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதி வைக்கவும்.

*நன்றாக கொதித்து சாறு நன்றாக இறக்கியதும் வடிகட்டி மிளகுப் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து சூடான சூப்பைப் பரிமாறவும்.

மற்ற செய்திகள்