‘எங்க பையன் அப்படி பட்டவன் இல்ல’.. நிர்வாணமாக்கி, முகத்தில் கரியை பூசி.... இளைஞருக்கு நடந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆடு திருடியதாக கூறி இளைஞரை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘எங்க பையன் அப்படி பட்டவன் இல்ல’.. நிர்வாணமாக்கி, முகத்தில் கரியை பூசி.... இளைஞருக்கு நடந்த கொடுமை..!

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பால்கர் என்ற கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவரின் ஆடு காணாமல் போயுள்ளது. அந்த ஆட்டை திருடியதாக 16 வயது இளைஞரை பிடித்து 3 பேர் சரமாரியாக அடித்துள்ளனர். அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததுடன் முகத்தில் கரியை பூசி, பின்னர் தலை முடியையும் வெட்டி உள்ளனர். இதனை அடுத்து ஆடு திருடியதற்காக 1 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

இதனை அடுத்து அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த இளைஞர் நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவரது பெற்றோர் தங்களது மகன் அப்படி செய்பவன் இல்லை என போலீசாரிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆடு திருடியதாக கூறி இளைஞரை நிர்வாணப்படுத்தி அடித்து சித்ரவதை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்