'கொலை வெறி'யோடு ஓடிவந்த காட்டு யானைக்கு முன்னால்... 'செல்பி' எடுத்த இளைஞர்... கடைசில என்ன ஆச்சுன்னு பாருங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வேகமாக ஓடிவந்த காட்டு யானை முன்னால் இளைஞர் செல்பி எடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

'கொலை வெறி'யோடு ஓடிவந்த காட்டு யானைக்கு முன்னால்... 'செல்பி' எடுத்த இளைஞர்... கடைசில என்ன ஆச்சுன்னு பாருங்க!

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில் பூனத்முட்டே என்னும் கிராமம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும். சிலரை தாக்கவும் செய்திருப்பதால் அந்த பகுதி மக்கள் எப்போதும் எச்சரிக்கையுடனேயே இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டு யானை ஒன்று வேகமாக தலைதெறிக்க ஓடி வந்தது. அப்போது ஆட்டோவில் சென்ற இளைஞர் ஒருவர் யானை வருவதை பார்த்து சற்றும் பயம் கொள்ளாமல் யானைக்கு முன் நின்று செல்பி எடுத்தார்.

அதோடு யானை ஓடி வருவதை வீடியோவாகவும் பதிவு செய்தார். இளைஞருக்கு மிக அருகில் நெருக்கமாக ஓடிவந்த யானை கடைசி நொடியில் மாற்று வழியில் ஓடிவிட்டது. இதனால் அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இல்லையெனில் அவர் அந்த யானையிடம் சிக்கி இருப்பார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மற்ற செய்திகள்