காதலனுக்கு கஷாயத்தில் விஷம்.. இணையத்தில் காதலி Search செய்த விஷயம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் தனது காதலனுக்கு இளம்பெண் ஒருவர் விஷம் கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

காதலனுக்கு கஷாயத்தில் விஷம்.. இணையத்தில் காதலி Search செய்த விஷயம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

Also Read | மாமன்னர் ராஜராஜ சோழரின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்.. முதல்வர் முக. ஸ்டாலின் அறிவிப்பு..!

கன்னியாகுமரி - கேரள மாநில எல்லையில் பாறசாலை என்னும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (வயது 23). இவர் களியக்காவிளை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற இளம்பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கிரீஷ்மா வீட்டிற்கு சென்றிருந்த அவரது காதலன் ஷாரோன் ராஜ், வீட்டிற்கு வெளியே வந்த பிறகு வாந்தி எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது அவருடன் இருந்த நண்பர் இதுபற்றி கேட்டதாக கூறப்படும் நிலையில், ஷாரோன் ராஜ் எதுவும் தெளிவாக சொல்லவில்லை என தெரிகிறது. பின்னர், வீட்டிற்கு வந்த ஷாரோன் ராஜின் உடல் நிலையும் மோசமாகி உள்ளது. இதன் பின்னர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், அவரது உடல்நிலை இன்னும் மோசம் ஆகவே திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

women who poisoned his lover online search makes everyone shock

அங்கே அவரது உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி ஷாரோன் ராஜ் உயிரிழந்தார். இதனையடுத்து ராஜின் தந்தை போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து கிரீஷ்மா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தேக வளையத்திற்குள் கொண்டுவந்தனர் காவல்துறையினர்.

அப்போது இதனை கிரீஷ்மாவின் குடும்பத்தினர் மறுத்திருக்கின்றனர். ஆனால், ஷாரோனின் உடலில் விஷம் கலந்திருப்பது உறுதியானவுடன், கிரீஷ்மா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மேலும், ஜாதகத்தில் முதல் கணவர் இறந்துவிடுவார் என சொல்லப்பட்டதாகவும், அதனாலேயே கிரீஷ்மா இப்படி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

women who poisoned his lover online search makes everyone shock

இந்நிலையில், போலீசில் சிக்கிக்கொள்ளாமல் கொலை செய்வது எப்படி? என்றும் ஒருவேளை சிக்கிக்கொண்டால் எவ்வளவு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் முன்னரே இணையத்தில் தேடியதாக அந்த பெண் காவல்துறையில் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தடயங்களை அழிக்க முயன்றதாக இளம்பெண்ணின் தாய் சிந்து, அவரது மாமா நிர்மல் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது கேரளாவையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | காதலனுக்கு கஷாயத்தில் விஷம்.. கேரளாவையே நடுங்க வச்ச இளம்பெண்.. பகீர் சம்பவத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

KERALA, YOUTH, LOVER, POISON, ONLINE SEARCH

மற்ற செய்திகள்