LIGER Mobile Logo Top
Tiruchitrambalam Mobile Logo Top

"ஆண் குழந்தை பிறக்கணும்னா அருவிக்கு போய்".. மந்திரவாதியால் பெண்ணுக்கு நடக்க இருந்த பயங்கரம்.. கணவரின் குடும்பத்தினர் செய்த அதிர்ச்சி காரியம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புனே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் மூலமாக நடந்த சம்பவம் தொடர்பான செய்தி, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

"ஆண் குழந்தை பிறக்கணும்னா அருவிக்கு போய்".. மந்திரவாதியால் பெண்ணுக்கு நடக்க இருந்த பயங்கரம்.. கணவரின் குடும்பத்தினர் செய்த அதிர்ச்சி காரியம்!!

Also Read | மாத்திரை டப்பா வடிவில் 'திருமண' அழைப்பிதழ்.. "Expiry Date'ல இருந்த விஷயம் தான் அல்டிமேட்"!!

மகாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர், ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் இருந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழ்நிலையில், அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பது பற்றி அறிய அப்பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவரை அவர்கள் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு அந்த மந்திரவாதியோ, ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால், அருவி ஒன்றில் பொது வெளியே, ஆடை இன்றி அந்த பெண் குளிக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் கூறி உள்ளார்.

இதனைக் கேட்டதும் அந்தப் பெண் அதிர்ந்து போன நிலையில், மந்திரவாதியின் முடிவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதே வேளையில், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர், பொது வெளியில் ஆடை இன்றி அருவியில் குளிக்கும் படி, அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், அவரை வேறொரு மாவட்டத்திற்கு அழைத்து சென்று, அருவியில் குளிக்க வற்புறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பாக, அந்த பெண் தனது உறவினர்களிடம் தெரிவிக்கவே அவர்கள உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், மந்திரவாதி உள்ளிட்டோர் மீது அந்த பெண் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த பெண்ணின் கணவரின் குடும்பத்தினர், வரதட்சனை கேட்டு பலமுறை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், ஆண் குழந்தை கிடைக்காத காரணத்தினால் மனதளவிலும், உடளவிலும் அவருக்கு துன்பத்தை கொடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

அதே போல, அந்த பெண்ணின் கையெழுத்தை போலியாக இட்டு, அவரது சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்து, 75 லட்சம் கடன் பெற்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அந்த பெண்ணின் கணவர் உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆண் குழந்தை கிடைக்க வேண்டும் என்பதற்காக மந்திரவாதி சொன்ன விஷயமும் அதை ஏற்று, பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் செய்ய முயன்ற காரியமும் கடும் பீதியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Also Read | வழக்கமா லாட்டரி வாங்கும் பெண்.. இந்த முறை செய்த புது விஷயம்.!.. "அடுத்த சில நாள்லயே".. காலிங் பெல்லை அடித்த அதிர்ஷ்டம்.!

WOMAN, HUSBAND, FAMILY, CONCEIVE MALE CHILD

மற்ற செய்திகள்