VTK M Logo Top

"கல்யாணம் ஆகி 8 வருசம் கழிச்சு".. கணவர் பத்தி மனைவிக்கு தெரிஞ்ச 'உண்மை'.. "இத கண்டுபிடிக்கவே எனக்கு இத்தனை நாள் ஆயிடுச்சு"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

40 வயதாகும் பெண் ஒருவர், தனது கணவர் மீது கொடுத்த புகார் தொடர்பான செய்தி, தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"கல்யாணம் ஆகி 8 வருசம் கழிச்சு".. கணவர் பத்தி மனைவிக்கு தெரிஞ்ச 'உண்மை'.. "இத கண்டுபிடிக்கவே எனக்கு இத்தனை நாள் ஆயிடுச்சு"

Also Read | "இனிமே சூரியன பாக்குறப்போ எல்லாம் இந்த டவுட்டு தானே வரும்".. சூரியனின் நிறம் பற்றி எழுந்த விவாதம்.. விண்வெளி வீரர் சொன்னது என்ன??

டெல்லியை அடுத்த வதோதரா என்னும் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவரின் முதல் கணவர், கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்து விட்டார்.

இதன் பின்னர், அந்த பெண்ணின் பெற்றோர் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்துள்ளனர். அதன் படி, திருமண தகவல் மையத்திலும் அவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், டெல்லியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கவும் அவரின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, கடந்த 2014 ஆம் ஆண்டு, அவர்கள் இருவருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணமும் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, தனது முதல் கணவர் மூலம் பிறந்த மகளுடன் அந்த பெண்ணும் தனது இரண்டாவது கணவருடன் வசித்து வந்துள்ளார். திருமணம் முடிந்த பின்னர், இருவரும் தேனிலவுக்காக காஷ்மீர் சென்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அந்த சமயத்தில், மனைவியுடன் உறவில் இருக்கவும் கணவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மனைவியும் காரணம் கேட்க, முன்பு நடந்த விபத்து காரணமாக தனக்கு உடல்நல குறைவு இருப்பதாக கூறி உள்ளார். தொடர்ந்து, பல மாதங்கள் மனைவியுடன் உறவில் இருக்கவும் அந்த கணவர் மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர், தனது உடல்நிலையை சரி செய்ய வேண்டும் என்றால், அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் கணவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர், கடந்த 2020 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை ஒன்றை கொல்கத்தாவிற்கு போய் அந்த கணவர் செய்து கொண்ட நிலையில், அடுத்த கொஞ்ச மாதம் கழித்து தான் அதிர்ச்சி காரணம் ஒன்று அவரது மனைவிக்கு தெரிய வந்துள்ளது. தான் பெண்ணாக இருந்து ஆணாக மாறுவதற்கான பாலியல் மாற்று ஆபரேஷன் செய்து கொண்டது அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனை கண்டுபிடிக்க தனக்கு 8 ஆண்டுகள் ஆகி விட்டதாகவும், வேறு யாரிடமாவது தெரிவித்து விட்டால் தன்னை மிரட்டுவதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். தன்னை திருமணம் செய்து ஏமாற்றிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் போலீசார் குறிப்பிட்டுள்ளார்.

8 ஆண்டுகள் கழித்து தனது கணவர் குறித்து பெண்ணுக்கு தெரிய வந்த விஷயம் தொடர்பான செய்தி, இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Also Read | 43 வருசத்துல 53 பொண்ணுங்க கூட கல்யாணம்.. "யாரு கூடயும் வாழ்ந்தது செட் ஆகலையாம்".. 63 வயசில் கடைசியாக எடுத்த முடிவு!!

WOMAN, HUSBAND, FINDS

மற்ற செய்திகள்