தன்னை போல இருக்கும் பெண்ணை கொன்று.. தற்கொலை நாடகமாடிய இளம்பெண்.. காதலனுடன் பகீர் பிளான்!!.. தலை சுற்ற வைத்த பின்னணி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தர பிரதேச மாநிலம், நொய்டா பகுதியில் வசித்து வருபவர் பாயல் பாட்டி. பாயலின் பெற்றோர், தங்களின் உறவினரான சுனில் என்பவரிடம் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தன்னை போல இருக்கும் பெண்ணை கொன்று.. தற்கொலை நாடகமாடிய இளம்பெண்.. காதலனுடன் பகீர் பிளான்!!.. தலை சுற்ற வைத்த பின்னணி!!

Also Read | காதல் மனைவி மீது வந்த சந்தேகம்.. தாலி கயிறை வைத்தே கணவன் செஞ்ச பயங்கரம்.. உறைந்துபோன கிராமம்..!

இதனைத் தொடர்ந்து, கடனைத் திருப்பி தரும்படி சுனில் தொடர்ந்து பாயலின் குடும்பத்தினரை வற்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், பாயலின் அண்ணி மற்றும் அவரது சகோதரர்கள் கூட பணத்தை திருப்பி கேட்டு அவரது குடும்பத்தினரை தொந்தரவு செய்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

இதனிடையே, கடந்த மே மாதம் கடன் தொல்லை காரணமாக பாயலின் பெற்றோர் விபரீத முடிவை எடுத்துக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் தனது பெற்றோர் மறைவுக்கு காரணமாக இருந்த உறவினர்களை பழி வாங்க வேண்டும் என்று ஒரு பக்கமும் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க வேண்டும் என மறுபக்கமும் திட்டம் போட்டுள்ளார் பாயல்.

Woman fake her own death plan with her lover

தனது காதலனான அஜய் தாக்கூர் என்பவருடன் பாயல் பாட்டி போட்டுள்ள திட்டம் தான், தற்போது பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. அஜய் தாக்கூருடன் நொய்டா பகுதியில் உள்ள மால் ஒன்றிற்கு சென்ற போது, அங்கே தன்னை போன்ற ஒரு உடல் அமைப்பை கொண்டு வணிக வளாகத்தில் வேலை செய்து வரும் ஹேமா சவுத்ரி என்ற பெண்ணையும் பாயல் பார்த்துள்ளார்.

தன்னை போன்ற உடல் அமைப்புடன் ஹேமா என்ற பெண் இருந்ததால் அவரை கொன்று விட்டு தான் உயிரிழந்ததாக அனைவரையும் நம்ப வைக்கலாம் என்றும் அதிர்ச்சி திட்டம் போட்டுள்ளார் பாயல். இதற்காக தனது காதலன் அஜய் தாக்கூரை ஹேமாவிடம் பழகுமாறு பாயல் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Woman fake her own death plan with her lover

இதனையடுத்து, அஜய் தாக்கூரும் ஹேமாவுடன் நட்பாக பழகி வந்துள்ள நிலையில், கடந்த மாதம் ஹேமாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு பாயல் வீட்டிற்கும் வந்துள்ளார் அஜய் தாக்கூர். இதன் பின்னர், பாயல் மற்றும் அஜய் ஆகிய இருவரும் சேர்ந்து ஹேமாவை கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், ஹேமாவின் முகத்தை அடையாளம் தெரியாதவாறு சிதைத்து அவரது உடலில் பாயலின் உடையையும் அணிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல், கொதிக்கும் எண்ணெய் தனது முகத்தில் பட்டதால் தனது அழகு போய் விட்டதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும் தன் கைப்பட கடிதம் எழுதி ஹேமா அருகே போட்டு விட்டு காதலன் அஜய்யுடன் தலைமறைவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Woman fake her own death plan with her lover

ஆனால், மறுபக்கம் ஹேமாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில், இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, அஜய் தாக்கூருடன் கடைசியாக ஹேமாவும் பைக்கில் சென்றது தெரிய வந்தது. அப்படி ஒரு சூழலில், இது தொடர்பாக நடந்து வந்த விசாரணையில், பாயல் மற்றும் அஜய் ஆகியோர் திட்டம் போட்டு ஹேமாவை கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read | பணம் பந்தயம் வைத்து லுடோ?.. வீட்டு உரிமையாளரிடம் தோற்றதால் பெண் எடுத்த முடிவு.. அடுத்த நிமிஷமே வீட்டுக்கு தெறிச்சு ஓடிய கணவன்!!

UTTARPRADESH, WOMAN, FAKE, DEATH PLAN, LOVER

மற்ற செய்திகள்