3 வருடமாக தொடர்ந்த உறவு.. ஓட்டம் பிடித்த மாமியார் - மருமகன்.. கலங்கி நிற்கும் மகள்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தின் ராம்புர்கஹத் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண கோபால் தாஸ். இவருக்கும், பிரியங்கா தாஸ் என்ற பெண்ணுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

3 வருடமாக தொடர்ந்த உறவு.. ஓட்டம் பிடித்த மாமியார் - மருமகன்.. கலங்கி நிற்கும் மகள்..

திருமணத்திற்கு பிறகு, இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, தனது மனைவி பிரியங்காவுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்த கிருஷ்ண கோபால், அவரை அடித்து துன்புறுத்தவும் செய்துள்ளார். இதனால், இருவரது குடும்பத்திலும், கோபால் செய்த அட்டூழியங்கள், பெரிய பஞ்சாயத்தை உண்டு பண்ணியது. தொடர்ந்து, இரு தரப்பினரும் பேசி தீர்க்கப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.

west bengal mother in law run away with son in law

அதாவது, தன் மனைவி மீது கோபால் வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதற்கு, அவரது மனைவி வீட்டில் சிறிது காலம் தங்கியிருக்குமாறு முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக, வீட்டோடு மாப்பிள்ளையாக பிரியங்காவின் வீட்டிலேயே அவரது பெற்றோர்களுடன் தங்கியிருந்தார் கிருஷ்ண கோபால். வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க, அவர் நல்லபடி பழகிக் கொண்டார் என கூறப்படுகிறது. இதனால், மனைவி மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்த போதும், போகாமல் பிரியங்காவின் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

மாமியாருடன் நெருக்கம்

இந்நிலையில் தான், கிருஷ்ண கோபால் ஈடுபட்டு வந்த தவறான உறவு குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று, பிரியங்காவிற்கு தெரிய வந்துள்ளது. தனது மாமியாரும், பிரியங்காவின் தாயாருமான ஷிபாலி தாஸுடன் நெருங்கி பழகி வந்துள்ளார் கிருஷ்ண கோபால். வீட்டோடு மாப்பிள்ளையான அவர், அங்கு யாரும் இல்லாத போது, தனது மாமியாருடன் காதல் வயப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் வரை இவர்களின் உறவு நீடித்துள்ளது.

west bengal mother in law run away with son in law

வெடித்த பூகம்பம்

இதனையடுத்து, தனது கணவர் மற்றும் தாய் நடத்தையில் சந்தேகமடைந்த பிரியங்கா, ஒரு நாள் தானே நேரில் கண்டு, இதனை உறுதியும் செய்துள்ளார். இதனால், மீண்டும் இருவரது குடும்பத்திலும் மிகப்பெரிய பூகம்பம் வெடித்துள்ளது. இறுதியில், தனது மருமகனை அழைத்துக் கொண்டு, ஷிபாலி தாஸ், வீட்டை விட்டு வெளியேறி, தனியாக குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

west bengal mother in law run away with son in law

துரோகம்

மகளின் வாழ்க்கையை மட்டுமில்லாமல், தனது கணவரின் வாழ்க்கைக்கும் துரோகம் செய்து விட்டு, ஷிபாலி தாஸ் இந்த முடிவை எடுத்துள்ளார். தனது கணவர் மற்றும் தாயாரின் செயலால், உடைந்தே போன பிரியங்கா, தனது கணவரை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்கும் படி, தந்தையுடன் சேர்ந்து புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து, போலீசாரும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டோடு மாப்பிள்ளையாக வந்த மருமகன், தனது மாமியாருடன் நெருங்கி பழகி, தற்போது வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த சமத்துவம், அப்பகுதியில் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.

MOTHER IN LAW, SON IN LAW, WEST BENGAL, மாமியார், மருமகன்

மற்ற செய்திகள்