"இவ்ளோ பெரிய தார்பாய புடிச்சிட்டு மழை'ல எங்க போறாங்க??.." சாலையில் வேற லெவல் காட்டிய மக்கள்.. வைரல் காரணம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நமது நாடு முழுவதும் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளது. பல இடங்களில், வெயில் என்பதை மறைத்து, எப்போதும் மிகவும் சில்லென இருக்கும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.

"இவ்ளோ பெரிய தார்பாய புடிச்சிட்டு மழை'ல எங்க போறாங்க??.." சாலையில் வேற லெவல் காட்டிய மக்கள்.. வைரல் காரணம்

Also Read | மரித்த பின் சடலங்களை விற்று வந்த பெண்.. அங்க தான் ட்விஸ்ட்.. திடீரென அம்பலமான பகீர் பின்னணி

இதற்கு மத்தியில், கல்யாண சீசனும் பல இடங்களில் களை கட்டி வருகிறது. ஒருவரின் வாழ்க்கையின் மிக உன்னத தருணமான திருமணத்தின் போது, மிகவும் ஆடம்பரமாக அல்லது அந்த திருமண நிகழ்வை இன்னும் அழகாக்க விமரிசையான சில சடங்குகளும் நடத்தப்படுகிறது.

அதிலும் குறிப்பாக, திருமண ஊர்வலம், மெஹந்தி, சங்கீத் உள்ளிட்ட பல சடங்குகளும் நடைபெறுகிறது. இதில் திருமண ஊர்வலம், வட இந்திய பகுதிகளில் அதிகம் கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கமான விஷயம் ஆகும்.

திருமண ஊர்வலம்

மாப்பிள்ளையை குதிரை அல்லது வாகனத்தில் உட்கார வைத்து, மேள தாளங்களுடன் நடனமாடிய படி, நடந்து கொண்டே ஊர்வலமாக செல்வார்கள். இது தொடர்பாக்க நிறைய வீடியோக்களை கூட நாம் இணையத்தில் பார்த்திருப்போம். அப்படி ஒரு திருமண ஊர்வலத்தின் போது, நடந்த அசத்தலான சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

wedding baraat in heavy rain video circulates in social media

மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியில், சில தினங்களுக்கு முன் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த சமயத்தில், திருமண ஊர்வலமாக மாப்பிள்ளையின் வீட்டார் சென்றுள்ளனர். மாப்பிள்ளை வாகனம் ஒன்றில் முன்னே செல்ல, பின்னால் உறவினர்கள் பலரும் சென்றனர். ஆனால், அவர்கள் எப்படி சென்றார்கள் என்பது தான் வீடியோவின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

தார்பாயை எடுத்த உறவினர்கள்

திருமண ஊர்வலம் சென்றுகொண்டிருந்த போது, மழை பெய்து கொண்டிருக்க, உறவினர்கள் யாரும் ஒதுங்கி நிற்காமல், மிக நீளமான மஞ்சள் நிற தார்பாயை குடை போல பிடித்தபடி, சுமார் 30 க்கும் மேற்பட்டோர் சாலையில் நடந்து செல்கின்றனர். இன்னும் சிலர், மழையில் நனைந்த படி, நடனமாடிக் கொண்டும் செல்கின்றனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட, இணையத்திலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இது தான் முழு அர்ப்பணிப்பு என வீடியோவை பகிர்ந்த ஒருவர், கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சில நெட்டிசன்கள், இந்தியாவில் தான் இப்படி எல்லாம் நடக்கும் என்றும், அற்புதமான வீடியோ என்றும் ஏராளமான அசத்தல் கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

 

Also Read | "நான் மட்டும் அங்க போகலன்னா.." வற்புறுத்தும் கணவர்.. பதற வைத்த மனைவியின் புகார்..

 

WEDDING, WEDDING BARAAT, HEAVY RAIN, WEDDING BARAAT IN HEAVY RAIN VIDEO

மற்ற செய்திகள்