'மனைவியை கொலை செய்து... 'ஆத்திரம்' அடங்காமல், மாமனாரையும் குத்தி, அவர் 'பிறப்பு உறுப்பை' சிதைத்து கொன்ற கொடூரன்!' - நெஞ்சடைக்கும் 'அதிர்ச்சி' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மனைவி மற்றும் மாமனாரை ஒருவன் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மனைவியை கொலை செய்து... 'ஆத்திரம்' அடங்காமல், மாமனாரையும் குத்தி, அவர் 'பிறப்பு உறுப்பை' சிதைத்து கொன்ற கொடூரன்!' - நெஞ்சடைக்கும் 'அதிர்ச்சி' சம்பவம்!

மேற்கு வங்கம் கொல்கத்தா அருகேயுள்ள சோனர்புர் பகுதியில் வசித்து வரும் தம்பதி, ரமேஷ் பண்டிட்-சுமிதா. அவர்கள் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் நேற்று சுமிதா வீட்டிற்கு பூ பறிக்க சென்றுள்ளார். அப்போது, அவர் 76 வயது நிரம்பிய சுமிதாவின் வளர்ப்பு தந்தையின் சடலம் வீட்டுக்குள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு, அவர் அருகிலேயே சுமிதாவின் உடலும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளது. பதறிப்போன அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில வருடங்களுக்கு முன்னதாக, ரமேஷ் தன்னுடைய தாயாருடன் மாமனார் வீட்டுக்கு குடிபுக முயற்சி செய்துள்ளார். ஆனால், ரமேஷ் மாமனார் பாசுதேவ், அன்றாடங்காட்சியாக பிழைப்பு நடத்தி வந்ததால், இவர்களின் தேவைகளுக்கும் சேர்த்து உழைக்க முடியவில்லை.

அப்போது இருந்தே, ரமேஷுக்கும், பாசுதேவுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ரமேஷ்-சுமிதா இடையே சண்டை வந்துள்ளது. மேலும், ரமேஷ் தனது மாமனார் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்காக திட்டம் போடுவதாக சந்தேகித்துள்ளார். மறுபக்கம், மாமனார் பாசுதேவ், தன்னுடைய சொத்துகளை ரமேஷ் அபகரித்துக்கொள்ள காத்திருப்பதாக எண்ணியுள்ளார்.

சற்று நேரம் பொறுத்துப் பார்த்த ரமேஷ், சுமிதாவையும் பாசுதேவையும் கழுத்தில் கத்தியால் குத்தி கொடூரமான முறையில் இருவரையும் கொலை செய்துள்ளார். மாமனார் மீது இருந்த தீராப் பகையை, அவரது பிறப்பு உறுப்பை கடுமையாக தாக்கி வெளிப்படுத்தி இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்