2 நாளா அவர காணோம்... தேடி பாத்தது'ல தல மட்டும் தான் 'மிச்சம்' இருந்தது... குலை நடுங்க வைக்கும் 'பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலம் வயநாடு பகுதியை அடுத்த புல்பள்ளி அருகிலுள்ள பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வராத நிலையில், உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர்.

2 நாளா அவர காணோம்... தேடி பாத்தது'ல தல மட்டும் தான் 'மிச்சம்' இருந்தது... குலை நடுங்க வைக்கும் 'பயங்கரம்'!

இதனையடுத்து சிவகுமார் காணாமல் போன தகவல் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஊர் மக்கள் உதவியுடன் சிவகுமாரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதி ஓரத்தில் ரத்தக்கறை இருப்பதைக் கண்டனர். அதன் அருகே எதையோ இழுத்துச் சென்ற அடையாளமும் தெரிந்தது.

அதனைப் பின் தொடர்ந்து சென்ற போது எலும்புக்கூடாக ஒரு சடலம் கிடப்பதை கண்டு அனைவரும்  அதிர்ச்சியில் உறைந்து போயினர். அதில் தலை மட்டுமே இருந்ததால் அதனை வைத்து சிவகுமார் தான் என அடையாளம் கண்டனர்.  இரையாகும் நோக்கில் அவரை புலி வேட்டையாடியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், சிவகுமாரை தாக்கிய புலி, தலையை தவிர அவரது உடலின் அனைத்து பாகங்களையும் தின்று விட்டு எலும்புக்கூடாக விட்டுச் சென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அவரது தலையை வைத்து தான் சிவகுமார் என்பதை உறுதி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியிலுள்ள மற்ற பழங்குடி மக்களை பேரச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புளியை பிடிக்கும் நோக்கில் வனத்துறையினர் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்