விஜய் மல்லையா மீது செம்ம கடுப்பில் வங்கிகள்!.. 'Check mate' செய்த நீதிமன்றம்!.. பேங்க் லாக்கரை உடைக்கும் அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய வங்கிகளில் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்து தப்பியோடிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை அந்த நாடும் கைவிரித்துவிட்டது.

விஜய் மல்லையா மீது செம்ம கடுப்பில் வங்கிகள்!.. 'Check mate' செய்த நீதிமன்றம்!.. பேங்க் லாக்கரை உடைக்கும் அதிகாரிகள்!

பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 வங்கிகள் விஜய் மல்லையா மீது தொடுத்த வழக்கு லண்டனில் உள்ள தலைமை திவால் நிலை மற்றும் நிறுவனங்களுக்கான நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரிக்ஸ், மல்லையா கடன்களை முழுமையாகவும், நியாயமாகவும் செலுத்துவார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் குறிப்பிட்டு அவரை திவாலானவராக அறிவித்தார்.

இதையடுத்து உலகெங்கும் உள்ள மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன. நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த ஒரு நிறுவனத்தின் இயக்குநராகவோ அல்லது நிறுவனத்தை உருவாக்கவோ முடியாது. அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதோடு, இந்திய மதிப்பில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அவரால் கடன் வாங்கவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, திவாலானவராக அறிவிக்கப்பட்டதை அடுத்து மல்லையா பயன்படுத்திய வங்கிக் கணக்குகள், கிரடிட் கார்டுகள் மற்றும் சொத்துகள் டிரஸ்டி ஒருவரிடம் ஒப்படைக்கப்படும். அந்த அதிகாரி அவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து, அவற்றை விற்று கடன் கொடுத்தவர்களுக்கு திரும்ப வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

மற்ற செய்திகள்