‘ஹோட்டலில் தீடீரென பற்றிய தீ’.. ‘கொழுந்துவிட்டு எரிவதால் பரபரப்பு’.. ‘கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராட்டம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்தியப்பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘ஹோட்டலில் தீடீரென பற்றிய தீ’.. ‘கொழுந்துவிட்டு எரிவதால் பரபரப்பு’.. ‘கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராட்டம்’..

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் அருகே ஹோட்டல் ஒன்றில் இன்று காலை திடீரென தீப்பற்றியுள்ளது. நொடியில் கட்டிடம் முழுவதும் பரவிய தீயால் ஹோட்டல் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. விபத்தின்போது ஹோட்டலின் உள்ளே இருந்தவர்கள் அனைவரும் அவசர வழியில் பத்திரமாக வெளியே அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்து வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், திடீரென ஹோட்டலில் தீப்பற்றி எரிவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

MADHYA PRADESH, INDORE, HOTEL, MAJOR, FIRE, ACCIDENT