ஒரே தும்மலில் சரிந்து விழுந்து இளைஞர் மரணம் ‌‌.. நண்பர்களுடன் வாக்கிங் போனபோது சோகம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேச மாநிலத்தில் நண்பர்களுடன் நடந்து சென்ற இளைஞர் ஒருவர் தும்மும்போது அப்படியே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

ஒரே தும்மலில் சரிந்து விழுந்து இளைஞர் மரணம் ‌‌.. நண்பர்களுடன் வாக்கிங் போனபோது சோகம்..

உத்திர பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் உள்ள  கித்வாய்நகர் காளி (Kidwainagar Gali) பகுதியை சேர்ந்தவர் ஜுபைர். இவர் கடந்த 2 ஆம் தேதி தனது நண்பர்களுடன் வாக்கிங் சென்றிருக்கிறார். அப்போது, அவருக்கு தும்மல் வந்திருக்கிறது. அதனை தொடர்ந்து நடந்து கொண்டிருந்த ஜுபைர் திடீரென மயங்கி கீழே விழ அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

ஜுபைர் கீழே விழுந்ததும் அவரை தட்டி எழுப்ப அவரது நண்பர்கள் முயன்றிருக்கிறார்கள். ஆனால், ஜுபைரிடத்தில் எவ்வித சலனமும் இல்லை. இதனால் கலக்கமடைந்த அவரது நண்பர்கள் உதவி கேட்டு குரல் எழுப்பியிருக்கின்றனர். இதனிடையே அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, அவர்களது உதவியுடன் ஜுபைர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

அங்கே ஜுபைரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதனால் ஜுபைரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கிப்போயினர். இளைஞரான ஜுபைர் தும்மல் விழுந்த கனத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

நண்பர்களுடன் வாக்கிங் சென்ற வேளையில் தும்மும்போது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் தாண்டியா நடனம் ஆடும்போது 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர வைத்திருந்தது. இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் தும்மும்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

SNEEZE, UP, YOUNGSTER

மற்ற செய்திகள்