யுவர் ஆனர்...! 'என் கணவர் கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கி கொடுங்க ப்ளீஸ்...' என்னம்மா உனக்கு பிரச்சனை...? - காரணத்தை கேட்டு ஆடி போன நீதிபதி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேசத்தில் பெண் ஒருவர் தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற நூதன காரணத்தை கூறிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

யுவர் ஆனர்...! 'என் கணவர் கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கி கொடுங்க ப்ளீஸ்...' என்னம்மா உனக்கு பிரச்சனை...? - காரணத்தை கேட்டு ஆடி போன நீதிபதி...!

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளில் நிறைவடைந்துள்ள நிலையில் வினோதமான காரணங்களை கூறி நீதிமன்றத்தை கலங்கடித்துள்ளார்.

தன் விவாகரத்து குறித்து அவர் நீதிமன்றத்தில் கூறியதாவது, என் கணவருடன் வாழ எனக்கு பிடிக்கவில்லை, நான் எதிர்பார்த்த வாழ்க்கை இது இல்லை. என் கணவர் என்னிடம் கோபமாக பேசுவதில்லை. அவரின் அன்பு என்னை மூச்சு திணற செய்கிறது.

அவர் எதற்காகவும் என்னை அழவிடுவதில்லை. எனக்காக சமைக்கிறார், வீட்டு வேலை செய்கிறார். நான் இப்படி வாழ ஆசைப்படவில்லை. என் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை. எனவே எனக்கு விவாகரத்து வேண்டும்' எனக்கூறி நீதிமன்றத்தையே அதிரவைத்துள்ளார்.

பெண்மணியின் காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த ஷாரியா நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்து விட்டது. மேலும் இது தொடர்பாக உள்ளூர் பஞ்சாயத்தை அந்த இளம்பெண் அணுகியபோதும் அவர்களும் கை விரித்து விட்டனர்.

ஆனால் அந்தப் பெண்மணியின் கணவர் தான் தன் மனைவியை மிகவும் நேசிப்பதாகம், எங்களை பிரித்து விடவேண்டாம் என கூறி மனுவினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். நீதிமன்றமோ இந்த மாதிரியான பிரச்சனைகளை நீங்களே முடிவுக்கு கொண்டு வருவது நல்லது என்று  தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்