#VIDEO: 'ஆப்பரேஷன் தியேட்டருக்குள்ள...' 'பெட்ல ஹாயா உட்கார்ந்திருந்த நாய்...' 'உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...' - வைரலாகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேசத்தில் மருத்துவமனை படுக்கையில் தெருநாய்கள் அமர்ந்திருக்கும் வீடியோ ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#VIDEO: 'ஆப்பரேஷன் தியேட்டருக்குள்ள...' 'பெட்ல ஹாயா உட்கார்ந்திருந்த நாய்...' 'உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...' - வைரலாகும் வீடியோ...!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மொராதாபாத் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மருத்துவமனை அமைந்துள்ள பெண்கள் அறுவை சிகிச்சை வார்டின் படுக்கையில் தெரு நாய் ஒன்று அமர்ந்து ஓய்வெடுக்கும் வீடியோ ட்விட்டரில் பரவி வைரலாகி வருகிறது.

இதனை தன் ட்விட்டரில் பதிவு செய்த நபர், 'உ.பியின் மொராதாபாத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் பெண் அறுவை சிகிச்சை வார்டில் எடுக்கப்பட்ட காட்சி. சமீபத்தில் சம்பல் பகுதியில் உள்ள மாவட்ட மருத்துமனையில் விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தில் இருந்த ரத்தத்தை நாய் நக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது' எனவும் குறிப்பிடுள்ளார்.

தற்போது இந்த சம்பவம் குறித்த வீடியோ ட்விட்டர் மட்டுமல்லாது சமூகவலைத்தளங்களில் வைரலாகி, உத்தரப்பிரதேச சுகாதாரத்துறையின் மோசமான நிலையை இந்த சம்பவங்கள் சுட்டிக்காட்டபடுவதாகவும் நெட்டிசன்களால் கூறப்படுகிறது.

 

மற்ற செய்திகள்