ஒரு முட்டையால இப்படி கூட நடக்குமா...! 'அண்ணன் இறந்தது கன்ஃபார்ம் ஆனப்போ, பேக்ரவுண்ட்ல ட்ரெயின் சவுண்ட் கேட்ருக்கு, உடனே...' - சண்டையில் நடந்த எக்ஸ்ட்ரீம் முடிவு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முட்டை சாப்பிடும்போது நடந்த தகராறில் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு முட்டையால இப்படி கூட நடக்குமா...! 'அண்ணன் இறந்தது கன்ஃபார்ம் ஆனப்போ, பேக்ரவுண்ட்ல ட்ரெயின் சவுண்ட் கேட்ருக்கு, உடனே...' - சண்டையில் நடந்த எக்ஸ்ட்ரீம் முடிவு...!

ரமேஷ் சந்த். என்பவர் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டதின் பந்தர்வா கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சொட்டு என்னும் 18 வயது மகனும் ஜித்தேந்தர் என்னும் 25 வயது மகனும் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் அருகில் உள்ள நகரில் கூலி வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எப்போதும் போல் நேற்றும் அண்ணன் தம்பி இருவரும் வேலையை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிட அமர்ந்துள்ளனர்.

அப்போது சாப்பிட வைக்கப்பட்ட முட்டையால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோபமடைந்த ரமேஷ் சந்தின் 18 வயது மகன் சொட்டு, தனது அண்ணன் ஜித்தேந்தரை பக்கத்தில் இருக்கும் கனமான இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இரத்த போக்கால் மயங்கிய ஜித்தேந்தர்   சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதை அறிந்த சொட்டு வீட்டின் அருகே ரயில் வரும் சத்தம் கேட்டுள்ளது, உடனே அங்கிருந்து ஓடி தன் அண்ணனை கொன்ற மன அழுத்தத்தில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

மேலும் ரத்த வெள்ளத்தில் தன் மூத்த மகனை பார்த்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர். மேலும் அக்கம்பக்கத்தினர் உதவியால் மூத்த மகன் ஜித்தேந்தரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பின் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களின் இளைய மகன் சொட்டுவும் இறந்த செய்தியை பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தாரை மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்