BGM Shortfilms 2019

‘எங்க வாழ்க்கையை அப்பா சீரழச்சிட்டார்’.. ‘மாணவியின் கடைசி வாட்ஸ் அப் மெசேஜ்’.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தற்கொலைக்கு காரணம் தனது தந்தைதான் என வாட்ஸ் அப்  மெசேஜ் அனுப்பிவிட்டு அம்மா, தங்கையுடன் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘எங்க வாழ்க்கையை அப்பா சீரழச்சிட்டார்’.. ‘மாணவியின் கடைசி வாட்ஸ் அப் மெசேஜ்’.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!

பெங்களூரைச் சேர்ந்தவர்கள் சித்தய்யா (48)-ராஜேஸ்வரி (40) தம்பதி. இதில் சித்தய்யா மின்வாரியத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மானசா (17), பூமிகா (15) என்ற இரு மகள்கள் இருந்துள்ளனர். இதில் மானசா 12 -ம் வகுப்பும், பூமிகா 10 -ம் வகுப்பும் படித்துவந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மானசா தனது மாமா புட்டசாமிக்கு ஒரு வாட்ஸ் அப் மேசேஜ் அனுப்பியுள்ளார். அதை பார்த்து புட்டசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில், ‘எல்லோருக்கும் நல்லா அப்பா கிடைக்க வேண்டும். அப்படியொரு அப்பா கிடைத்தவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால், என் அப்பா எங்களது வாழ்க்கையை சீரழித்துவிட்டார். எங்களுடைய தற்கொலைக்கு அவர்தான் காரணம்’ என வாட்ஸ் அப் மெசேஜில் இருந்துள்ளது.

உடனே புட்டசாமி பதறி அடித்துக்கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மூவரும் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளனர். இதைப் பார்த்து கதறி அழுத புட்டசாமி இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு சென்ற போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இவர்களது தற்கொலைக்கு சித்தய்யா வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு சித்தய்யா தமிழகம் வந்துள்ளார். இந்த சமயம் வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரி தனது மகள்களுடன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HUSBAND, AFFAIR, WIFE, DAUGHTERS, BENGALURU, SUICIDE