'திடீர்'னு காணாம போன 'பொண்ணு',,.. நாள் கணக்கா தேடி 'கடைசி'ல... "இப்படி தான் என் தங்கத்த பாக்கணுமா??"... 'கதறித் துடித்த 'பெற்றோர்'... நாட்டையே உலுக்கிய 'கொடூரம்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் கெரி என்னும் மாவட்டத்தில் 13 வயது சிறுமி கரும்பு தோட்டம் ஒன்றில்  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'திடீர்'னு காணாம போன 'பொண்ணு',,.. நாள் கணக்கா தேடி 'கடைசி'ல... "இப்படி தான் என் தங்கத்த பாக்கணுமா??"... 'கதறித் துடித்த 'பெற்றோர்'... நாட்டையே உலுக்கிய 'கொடூரம்'!!!

முன்னதாக, சில தினங்களுக்கு முன் அந்த சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில், சிறுமியின் பெற்றோர்கள் அப்பகுதி முழுவதிலும் மகளைத் தேடியுள்ளனர். இந்நிலையில், சிறுமியின் உடல் அங்குள்ள கரும்பு தோட்டத்தில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனைக் கண்ட சிறுமியின் பெற்றோர்கள் கதறித் துடித்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிறுமியின் முகத்தின் கண் மற்றும் பிற பாகங்களில் அதிக காயங்கள் இருந்தது. அதே போல,  சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்ததும் பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வந்தது.

நாடு முழுவதையும் உலுக்கிய இந்த கொடூரம் தொடர்பாக, போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். அந்த இருவரில், ஒருவரின் கரும்பு தோட்டத்தில் தான் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.  இவர்கள் இருவரது மீதும் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்