'6 மாசத்தில் கசந்த காதல் கல்யாணம்'... 'திடீரென மாலையும் கழுத்துமாக வந்த தந்தை'... யார் மனைவின்னு தெரிஞ்சதும் உடைந்து நொறுங்கிய இளைஞர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காதல் மனைவி பிரிந்துச் சென்ற துயரத்தைத் தாங்குவதற்குள் இளைஞருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.

'6 மாசத்தில் கசந்த காதல் கல்யாணம்'... 'திடீரென மாலையும் கழுத்துமாக வந்த தந்தை'... யார் மனைவின்னு தெரிஞ்சதும் உடைந்து நொறுங்கிய இளைஞர்!

உத்தரப்பிரதேச மாநிலம் பவுடன் எனும் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2016-ஆம் ஆண்டு பெண் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார்.இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகத் திருமணம் முடிந்த 6 மாதத்தில் அவர்கள் இருவரும், விவகாரத்து பெற்றுப் பிரிந்து விட்டனர்.

இதற்கிடையில், அந்த இளைஞரின் தந்தை திடீரென்று காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் அந்த இளைஞரின் தந்தையைத் தேடிய நிலையில் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த இளைஞரைக் காவல் நிலையம் வரவழைத்து ஒரு புகைப்படத்தைக் காட்டியுள்ளார்கள்.

UP man finds out his estranged wife married his father

அந்த புகைப்படத்தைப் பார்த்த நொடியில் அந்த இளைஞர் நொறுங்கிப்போனார். காரணம் அதில் மாலையும், கழுத்துமாக நிற்பது, ஆசை ஆசையாகக் காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்த மனைவியும், அந்த இளைஞரின் தந்தையும். இதையடுத்து போலீசார் அழைத்து விசாரணை செய்ததில், அந்த பெண், தான் தன்னுடைய இரண்டாவது கணவரான மாமனாருடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், அவருடனே வாழ ஆசைப்படுவதாகவும் காவல்நிலையத்தில் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் விசாரணை செய்த போலீசாரையே அதிர்ச்சியில் உறையவைத்தது.

மற்ற செய்திகள்