'தடல்' புடலா நடந்த 'கல்யாண' ஏற்பாடு!!... மணமகனின் 'நண்பர்களால்' வந்த 'பிரச்சனை'... திருமணத்தை நிறுத்திய 'மருமகள்'... பரபரப்பு 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவிருந்த திருமணம் ஒன்று கடைசி நேரத்தில் நின்று போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'தடல்' புடலா நடந்த 'கல்யாண' ஏற்பாடு!!... மணமகனின் 'நண்பர்களால்' வந்த 'பிரச்சனை'... திருமணத்தை நிறுத்திய 'மருமகள்'... பரபரப்பு 'சம்பவம்'!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டடத்திலுள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த இளைஞருக்கும், கன்னாஜ் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பரேலி வந்தடைந்தனர்.

மணமக்கள் இருவரும் முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ள நிலையில், வெகு விமரிசையாக இவர்களின் திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையே, மணமகனின் நண்பர்கள் சிலர் மணப்பெண்ணை நடனமாடுமாறு மேடையில் அழைத்துச் சென்றனர். இந்த செயலை மணமகளின் குடும்பத்தினர் கடுமையாக ஆட்சேபித்ததாக தெரிகிறது.

இதனையடுத்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் எழுந்தது. திருமண வீட்டில் அதிகம் பரபரப்பு எழுந்த நிலையில், திருமணத்தை நிறுத்தி விட்டு மணமகள் தனது வீட்டிற்கு திரும்பச் செல்ல முடிவு செய்தார். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக, மணமகளின் குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர். மணமகளின் குடும்பத்தினருக்கு அவர்களின் கல்யாண செலவான சுமார் 6 லட்சம் ரூபாய் வரை திருப்பியளிக்க மணமகனின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதன் பின்னர் வழக்கு எதுவுமில்லாமல் பிரச்சனையை முடித்துக் கொண்டனர்.

'எனது மகளின் முடிவுக்கு நான் மதிப்பளிக்கிறேன். அவளை மதிக்காத ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என என்னால் அவளைக் கட்டாயப்படுத்த முடியாது' என மணமகளின் தந்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மணமகனின் குடும்பத்தினர் பெண்ணின் உறவினர்களிடம் பேசி மிகவும் எளிய முறையில் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என அணுகியுள்ளனர். ஆனால், மணமகள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என தெரிகிறது.

'மணமகனின் நண்பர்கள் எனது சகோதரியிடம் தவறாக நடந்து கொண்டனர். எங்களது குடும்பத்தில் பொது இடங்களில் வைத்து பெண்களை ஆட அனுமதிக்க மாட்டோம்' என மணமகளின் சகோதரர் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்