asuran USA HOME

‘கரைபுரண்டோடிய வெள்ளத்தை கடக்க முயன்ற லாரி’ ‘நடுவழியில் சிக்கிகொண்ட பள்ளி மாணவிகள்’.. பதற வைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தானில் பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற லாரி வெள்ளித்தில் சிக்கிக்கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கரைபுரண்டோடிய வெள்ளத்தை கடக்க முயன்ற லாரி’ ‘நடுவழியில் சிக்கிகொண்ட பள்ளி மாணவிகள்’.. பதற வைத்த வீடியோ..!

ராஜஸ்தானில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கர்பூர் என்னும் பகுதியில் பள்ளி முடிந்து 12 மாணவிகள் லாரியில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது அவர்களை ஏற்றி சென்ற லாரி ராம்பூரில் உள்ள தரைப்பாலத்தைக் கடக்க முயன்றுள்ளது.

அப்போது பாலத்தின் மேல் ஆற்று வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் லாரி வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து லாரியில் இருந்த மாணவிகளை கயிறுகட்டி பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

SCHOOLGIRLS, DUNGARPUR, RAJASTHAN, TRUCK, FLOOD