Vilangu Others

ஷோபாவ பார்த்தப்போ வந்த டவுட்.. வெளிய கிடந்த செருப்பு.. உயிர் நண்பனின் மனைவி என்றும் பாராமல்.. நொறுங்கிப்போன கணவன்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நண்பனின் மனைவி படுக்கைக்கு வராததால் அவரை தீர்த்துக் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷோபாவ பார்த்தப்போ வந்த டவுட்.. வெளிய கிடந்த செருப்பு.. உயிர் நண்பனின் மனைவி என்றும் பாராமல்.. நொறுங்கிப்போன கணவன்

தகாத உறவு காரணமாக பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் விளையாட்டாக தொடங்கும் இந்த உறவுகள் நாளடைவில் வாழ்க்கையை அழிந்து போகும் விதமான சம்பவங்கள் நடக்கிறது. இதன் காரணமாக குடும்பங்கள் சிதைந்து போய் விடுகிறது. அந்த வீடுகளில் வாழும் குழந்தைகளும் உளவியல் ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இது ஒரு கட்டத்தில் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் போய் வாழ்கையை சின்னாபின்னமாக்கி விடுகிறது.

ஷோபாவிற்குள் இருந்து கண்டெடுப்பு:

மகாராஷ்டிர மாநிலம் மும்பை டோம்பிவிலியில் வசித்து வருபவர் சுப்ரியா ஷிண்டே. இவர் கடந்த 15-ந்தேதி தனது வீட்டில் ஷோபாவிற்குள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்த நபரை குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

கணவரிடம் விசாரணை:

இந்நிலையில், சுப்ரியா ஷிண்டே வீட்டின் வெளியே கொலையாளி விட்டு சென்ற காலணியையும் போலீசார் கைப்பற்றியிருந்தனர். இதுக்குறித்து சுப்ரியா ஷிண்டேவின் கணவரிடம் விசாரணை நடத்தியதில் அவரின் நண்பரும் தானும் தான் இம்மாதிரியான காலணியை ஒரே கடையில் வாங்கியதாக தெரிவித்து உள்ளனர்.

யாரும் இல்லாத நேரத்தில்:

இவர் நவிமும்பையை சேர்ந்த விஷால் தாவார் (வயது28) என தெரியவந்துள்ளது. அதன்பின், போலீசார் விஷால் தவாரை பிடித்து விசாரித்ததில் அவர் தான் சுப்ரியா ஷிண்டேவை தீர்த்துக் கட்டியதாக தெரிவித்துள்ளார். அவரது வாக்குமூலத்தில், சுப்ரியாவின் கணவர் வேலைக்காக வெளியே சென்றிருந்த போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுப்ரியா ஷிண்டேவை சந்திக்க சென்றதாக தெரிவித்துள்ளார்.

மறுத்த மனைவி:

அங்கு அவரிடம் உல்லாசமாக இருக்க வருமாறு கேட்டதாகவும், ஆனால், சுப்ரியா ஷிண்டே மறுத்து வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விஷால் தவார் அங்கிருந்த நைலான் கயிற்றினால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார். இதனால் மூச்சுத்திணறி சுப்ரியா ஷிண்டே உயிரிழந்ததால் உடலை மறைக்க ஷோபாவிற்குள் மறைத்து விட்டு தப்பி சென்றதாக தெரியவந்து உள்ளது.

மற்ற செய்திகள்