"என் காதலிக்கு எப்படி மெசேஜ் பண்ணுவ?" நண்பனைக் கொன்ற இளைஞரின் பகீர் வாக்குமூலம்.!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவராக இருந்தவர் நவீன். இவரும் அதே கல்லூரியில், ஒரே வகுப்பில் பயின்று வரும் ஹரிஹர கிருஷ்ணா என்ற மாணவனும் நண்பர்கள் ஆவார்.

"என் காதலிக்கு எப்படி மெசேஜ் பண்ணுவ?" நண்பனைக் கொன்ற இளைஞரின் பகீர் வாக்குமூலம்.!!

Also Read | முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளில் கமல் நெகிழ்ச்சி வாழ்த்து. என்ன சொல்லிருக்காரு பாருங்க.!!

இதனிடையே அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை நவீன் மற்றும் கிருஷ்ணா ஆகிய இருவருமே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது நவீனின் காதலை அந்த மாணவி ஏற்றுக்கொண்ட சூழலில் இருவரும் சுமார் இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து வெகு நாட்கள் கழித்து அந்த மாணவியிடம் ஹரிஹர கிருஷ்ணா காதலை வெளிப்படுத்த அவர்கள் இருவருக்கும் இடையே காதல் உருவானதாக சொல்லப்படுகிறது.

அதே வேளையில், தன்னை விட்டு காதலி பிரிந்து சென்ற போதும் அவருக்கு தொடர்ந்து செல்போனில் கால் செய்தும், மெசேஜ் அனுப்பியும் தொல்லை கொடுத்து வந்துள்ளார் நவீன். இதுபற்றி அந்த மாணவி தனது காதலன் ஹரிஹர கிருஷ்ணாவிடம் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த கிருஷ்ணா தனது காதலிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நண்பன் நவீனை ஹரிஹர கிருஷ்ணா கொலை செய்திருந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, ஹரிஹர கிருஷ்ணாவும் போலீசில் சரணடைந்திருந்தார்.

இந்த நிலையில், தனது நண்பரை கொலை செய்த ஹரிஹர கிருஷ்ணா, இது தொடர்பாக தற்போது போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக சில தகவல்களும் வெளியாகி உள்ளது. அதன்படி, அந்த சமயத்தில் தனியாக இருந்த ஹரிஹர கிருஷ்ணா, நவீனை தனது வீட்டிற்கு அழைத்து பின்னர் அவரை கொண்டு செல்லும் வழியில் மது அருந்த முயற்சி செய்ததாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து யாரும் இல்லாத இடத்தில் அவரை அழைத்துச் சென்ற ஹரிஹர கிருஷ்ணா, உங்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டு விட்டது என்றும் நான் காதலிக்கும் பெண்ணை ஏன் தொந்தரவு செய்கிறாய் என்றும் நவீனிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைக் கேட்டு நவீன் ஹரிஹர கிருஷ்ணாவை அடிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் ஏற்கனவே கொலை செய்யும் திட்டத்தில் இருந்த ஹரிஹர கிருஷ்ணாவும் அவரை திருப்பி அடிக்க தொடங்கியுள்ளார். இறுதியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நவீனின் தலையை அவர் வெட்டி உள்ள சூழலில் பின்னர் இதயத்தையும் வெளியே எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து நவீனின் விரல்களையும் துண்டித்த ஹரிஹர கிருஷ்ணா, அவரது உடலை யாரும் பார்க்காதவாறு மரங்களுக்கு அருகே இழுத்துச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு சில தினங்கள் கழித்து தன்னுடைய தந்தையிடமும் இந்த சம்பவத்தை ஹரிஹர கிருஷ்ணா தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசில் சரணடையுமாறும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நவீனை கொன்றது பற்றி தன்னுடைய காதலி மற்றும் நண்பன் ஒருவரிடமும் ஹரிஹர கிருஷ்ணா தெரிவித்த சூழலில் இதனை கேட்டு அவர்கள் பயந்து போனதாகவும் உடனடியாக போலீசில் சரணடைய சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இரண்டு மாதங்கள் முன்பே கத்தியை வாங்கி வைத்திருந்த ஹரிஹர கிருஷ்ணா, நவீனை கொலை செய்யவும் திட்டம் போட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | இது என்னய்யா ஜடேஜாவுக்கு வந்த சோதனை?!!.. திடீர்ன்னு நடந்த ட்விஸ்ட்.. அடுத்த நிமிஷமே மாறிய கோலி, ரோஹித் முகம்!!

TELANGANA, TELANGANA YOUTH, FRIEND, LOVER

மற்ற செய்திகள்