“பேய் ஓட்டுவதாகக் கூறி கணவனின் கண் முன்னே குரூரமாக தாக்கிய மந்திரவாதி!”.. துடிதுடித்து உயிரிழந்த இளம் பெண்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கானாவில் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மந்திரவாதியால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

“பேய் ஓட்டுவதாகக் கூறி கணவனின் கண் முன்னே குரூரமாக தாக்கிய மந்திரவாதி!”.. துடிதுடித்து உயிரிழந்த இளம் பெண்!

கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜிதா என்கிற 24 வயதான அப்பெண் மல்லேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த நிலையில் ரஜிதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

அவருக்கு பேய் பிடித்ததாக நினைத்த மல்லேஷ், உள்ளூர் மந்திரவாதி ஷாம் என்பவரை அழைத்து வர, ஷாம், ரஜிதாவுக்கு பேய் ஓட்டுவதாகக் கூறி ரஜிதாவின் தலைமுடியை பிடித்து கன்னத்தில் அறைந்ததுடன் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

அந்த சமயத்தில் கட்டிலில் தலை இடித்ததில் மயங்கிய ரஜிதா, துடிதுடித்து உயிரிழந்ததால், மந்திரவாதி ஷாம் மற்றும் ரஜிதாவின் உறவினரை போலீஸார் கைது செய்ததுடன், தலைமறைவான ரஜிதாவின் கணவர் மல்லேஷை தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்