வேலையவிட்டு அதிரடியாக நீக்கிய முதலாளி!.. இளைஞர்கள் போட்ட 'அதிபயங்கர ப்ளான்'!.. அடுத்தடுத்து நடந்த 'திகில்' சம்பவங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலங்கானாவில் பணியில் இருந்து நீக்கியதற்காக முதலாளியின் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

வேலையவிட்டு அதிரடியாக நீக்கிய முதலாளி!.. இளைஞர்கள் போட்ட 'அதிபயங்கர ப்ளான்'!.. அடுத்தடுத்து நடந்த 'திகில்' சம்பவங்கள்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்த பாலா ரெட்டி நகரை சேர்ந்தவர் அசாரூதின் அகமது. ரியல் எஸ்டேட் வியாபாரியான இவரிடம் முகமத் அஷ்வத் என்பவர் கார் ஓட்டுனராகவும், மிஸ்ரா அஸ்வஷ்க் என்பவர் தோட்ட பணியாளராகவும் கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். ஆனால், சில பிரச்னைகள் காரணமாக அவர்களை கடந்த மாதம் பணிநீக்கம் செய்துள்ளார் உரிமையாளர், அசரூதின் முகமது. இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் அசாரூதினை பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி தனது நண்பர்களுடன் 6 பேருடன் சேர்ந்து உரிமையாளர் அசாரூதின் வீட்டில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முகமத் அஷ்வத் மிஸ்ரா அஸ்வஷ்க் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1.28 கோடியை பறிமுதல் செய்தனர்.

 

மற்ற செய்திகள்