‘அரசு வேலைக்கு ஆசை’!.. மகன் போட்ட ‘மாஸ்டர்’ ப்ளான்.. விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அரசு வேலைக்காக பெற்ற தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘அரசு வேலைக்கு ஆசை’!.. மகன் போட்ட ‘மாஸ்டர்’ ப்ளான்.. விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்..!

தெலுங்கானா மாநிலம் பெட்டபள்ளி மாவட்டம் கொத்தூர் கிராமத்தை சேர்ந்த 55 வயதான நபர், அம்மாநில அரசு நடத்தும் சிங்கரேனி கொலியரீஸ் என்ற பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 27ம் தேதி காலை தனது தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டதாக மூத்த மகன் ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஊர் மக்களுக்கு சந்தேகம் எழுந்ததால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் இதுதொடர்பாக உயிரிழந்தவரின் மூத்த மகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து தெரிவித்த ராமகுண்டம் போலீஸ் கமிஷ்னர் சத்யநாராயணா, ‘விசாரணையில் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு மூத்த மகனே தனது தந்தையை கொலை செய்துள்ளார். இதற்கு இறந்தவரின் மனைவி மற்றும் இளைய மகன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். 25 வயதான மூத்த மகன் டிப்ளமோ படித்துள்ளார்.

பணியில் இருக்கும் போது தனது தந்தை உயிரிழந்துவிட்டால் அந்த வேலை தனக்கு கிடைக்கும் என நினைத்து கொலை செய்துவிட்டு, அதை மறைப்பதற்காக மாரடைப்பு என நாடமாடியுள்ளனர். தற்போது அவர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.’ என அவர் தெரிவித்தார். அரசு வேலைக்காக பெற்ற தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்