VIDEO: ‘கட்டையால் தலையில் ஓங்கி விழுந்த அடி’!.. ரோட்டில் சுருண்டு விழுந்த நபர்.. பதபதக்கவைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சாலையில் சென்ற நபர் மீது மர்மநபர் ஒருவர் கட்டியால் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO: ‘கட்டையால் தலையில் ஓங்கி விழுந்த அடி’!.. ரோட்டில் சுருண்டு விழுந்த நபர்.. பதபதக்கவைத்த வீடியோ..!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே நபர் ஒருவர் சாலையில் சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொரு நபர் அவரை கட்டையால் தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். ஆனாலும் அந்த நபரை அவர் கட்டையால் மேலும் மேலும் தாக்க, உடனே அருகில் இருந்த ஒருவர் வேகமாக தடுக்க ஓடி வந்தார். இதைப் பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவீந்தர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ரவீந்தரை அந்த நபர் எதற்காக தாக்கினார்? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ATTACKED, CCTV, SECUNDERABAD, TELANGANA, PSYCHO