'ரூபாய் 15 கோடி' இது வெளியில கசியக்கூடாது... நம்ம விசாரணை எல்லாம் 'பாழா' போயிரும்... லீக்கான 'வீடியோ'வால் அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு காரணம் அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி தான் என சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில், ரியா என்னுடைய மகனின் கணக்கில் இருந்து ரூபாய் 15 கோடியை அவரது அக்கவுண்டுக்கு மாற்றியுள்ளார். எனது மகனின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறார்.

'ரூபாய் 15 கோடி' இது வெளியில கசியக்கூடாது... நம்ம விசாரணை எல்லாம் 'பாழா' போயிரும்... லீக்கான 'வீடியோ'வால் அதிர்ச்சி!

எங்களுக்கு தெரிவிக்காமல் கம்பெனிகளின் பங்குகளை நிர்வகிக்கிறார். சுஷாந்தின் மன அழுத்தத்தைப் பகிரங்கப்படுத்துவதாக மிரட்டியுள்ளார். மேலும் அவரது சிகிச்சையின்போது அதிகப்படியான மருந்துகளை எடுக்க வைத்திருக்கிறார், என பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இந்த எஃப்.ஐ.ஆர் காப்பி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் சுஷாந்த் சிங் இறந்தபோது அவரது வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. டைம்ஸ் நவ் நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், இரண்டு அதிகாரிகள் பேசிக்கொள்கின்றனர். அதில், ''இந்த வீடியோ வெளியில் கசிந்துவிடக் கூடாது இல்லையெனில் நம் விசாரணை முழுவதும் பாழாகிவிடும்,'' என அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். இதனால் சுஷாந்த் மரணத்தில் மேலும் பல உண்மைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்