'தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங் என அடுத்தடுத்து.. நடிகைகளுக்கு பாய்ந்த சம்மன்!'.. 'பரபரப்பான பாலிவுட்!'.. இதுதான் காரணம்!.. 'சூடு பிடிக்கும் சுஷாந்த் மரண வழக்கு'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் தொடர்பான வழக்கில் பிரபல பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங் என அடுத்தடுத்து.. நடிகைகளுக்கு பாய்ந்த சம்மன்!'.. 'பரபரப்பான பாலிவுட்!'.. இதுதான் காரணம்!.. 'சூடு பிடிக்கும் சுஷாந்த் மரண வழக்கு'!

சுஷாந்த் சிங் மரண வழக்கின் விசாரணையில் போதைப் பொருள் பயன்பாடு விவகாரம் வெளியே வந்ததை அடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக களத்தில் குதித்தனர். அப்போதுதான் போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து நடிகை ரியா போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது. இதில் நடிகை ரியா சக்ரபோர்த்தியுடன் பலரும் சிக்கியதைத் தொடர்ந்து கைதும் செய்யப்பட்டனர்.

Sushant Case summons to Deepika Padukone ,Rakul Preet Singh and 2 more

இதனிடையே தீபிகா படுகோனேவின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷூக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். 

ALSO READ:"சுஷாந்த் தன்னோட போதைக்காக செஞ்சது இதுதான்!"... "அவர் இப்ப உயிரோட இருந்திருந்தா".. அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை அடுக்கிய ரியா!

கரிஷ்மா பிரகாஷிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், விசாரணையின் முடிவைப் பொருத்து தேவைப்பட்டால் தீபிகா படுகோனேவுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்படும் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்