'பிரியாணி' பட நடிகை திடீர் கைது...! 'அவரு' ஜெயில்ல வச்சு போடுற எல்லா பிளானையும்... வெளிய இருந்து 'பக்காவா' முடிச்சிருக்காங்க...! - அதிர வைக்கும் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மோசடி வழக்கில் சிக்கியுள்ள சுகேஷ் சந்திரசேகர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தலின் போது லஞ்சம் கொடுத்து வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாகவும், சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை தனியாக மற்றொரு வழக்கை பதிவு செய்தது.

'பிரியாணி' பட நடிகை திடீர் கைது...! 'அவரு' ஜெயில்ல வச்சு போடுற எல்லா பிளானையும்... வெளிய இருந்து 'பக்காவா' முடிச்சிருக்காங்க...! - அதிர வைக்கும் தகவல்கள்...!

இதற்கு அவருடன் துணையாக இருந்ததாக அவரது காதலி லீனா மரியா பால் என்ற நடிகை மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர் மெட்ராஸ் கபே, ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா உள்ளிட்ட மலையாளப் படங்களிலும், 2013-இல் வெளிவந்த பிரியாணி படத்திலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

Sukash Chandrasekhar's friend actress Leena Mariampal arrested

மேலும், இந்த சுகேஷ்-லீனா ஜோடி சென்னை இந்தியன் வங்கியிலும் சுமார் 19 கோடி ரூபாய் மோசடியும் செய்துள்ளனர். தற்போது காதலர் சுகேஷ் திகார் சிறையில் இருக்கும் நிலையில் லீனா மரியா பால் பெங்களூருவில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

Sukash Chandrasekhar's friend actress Leena Mariampal arrested

அதோடு, சிறையிலிருந்து கொண்டே சுகேஷ் ஈடுபட்டுவரும் பல மோசடி திட்டங்களை வெளியிலிருந்து செயல்படுத்தி சம்மந்தப்பட்டவர்களிடம் பணத்தை வாங்கி வைக்கும் வேலையை செய்து வந்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நடிகை லீனா மரியா பாலிடம் டெல்லி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்ததாக அமலாக்கத்துறை வழக்கிலும் லீனா மரியா பால் கைது செய்யப்பட உள்ளார்.

மற்ற செய்திகள்