'சொந்த' ஊருக்கு 'செல்பவர்களுக்கு' வசதியாக 'நாடு' முழுவதும் சிறப்பு 'ரயில்கள்!' - மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சொந்த ஊர் திரும்ப முடியாமல் வெளிமாநிலங்களில் உள்ளவர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. 

'சொந்த' ஊருக்கு 'செல்பவர்களுக்கு' வசதியாக 'நாடு' முழுவதும் சிறப்பு 'ரயில்கள்!' - மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோர், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லப் போகிற நிம்மதியில் உள்ளனர். 

ஆனால், ஒவ்வொருவரும் முறையான கொரோனா பரிசோதனைக்கு பின்னரே ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், வெளிமாநிலத்தில் இருந்து ஒரு மாநிலத்துக்கு உள்ளே நுழைபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது.