'இந்த' 7 மாநிலங்களுக்கு 'வெட்டுக்கிளிகள்' படையெடுக்கலாம்... மத்திய அரசு எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

7 மாநிலங்களுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

'இந்த' 7 மாநிலங்களுக்கு 'வெட்டுக்கிளிகள்' படையெடுக்கலாம்... மத்திய அரசு எச்சரிக்கை!

சமீபகாலமாக கொரோனாவை காட்டிலும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பே அதிக அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் இவை விவசாய பயிர்களை மொத்தமாக தின்று தீர்க்க கூடியவை. வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் இதற்கு முன் பாகிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. தற்போது இவை ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடக்கு மாநிலங்களுக்கு படையெடுத்து மிகுந்த அட்டகாசங்களை செய்து வருகின்றன.

இந்தநிலையில் டெல்லி முதல் கர்நாடகம் வரை வெட்டுக்கிளிகள் தாக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து மற்றொரு திரளான வெட்டுக்கிளிகள் கூட்டம் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி, டெல்லி, பீகார், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அரியானா, உத்தரகாண்ட், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை இயக்குனர் டாக்டர் ஆர்.கே.கவுண்டல் கூறுகையில், ''வெட்டுக்கிளி நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கவும், எந்தவொரு அவசரகால சூழ்நிலையையும் கட்டுப்படுத்தத் தயாராக இருக்குமாறும் கூறியுள்ளார். அதேபோன்று, வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அல்லது அதன் நடவடிக்கைகள் குறித்து அறியும் விவசாயிகள் அருகில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது, ​​பாலைவன வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த 'ஹாப்பர் பேண்ட்ஸ்' முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக ஆர்கனோபாஸ்பேட் ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

மற்ற செய்திகள்