My India Party

'வீடு தேடி வரும் திருப்பதி பிரசாதம்...' 'ஆன்லைன்ல பணத்த pay பண்ணவங்களுக்கு...' - காத்திருந்த அதிர்ச்சி தகவல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் புகழ் பெற்ற கோவில்களின் பட்டியலில் தெற்கிலிருந்து ஒன்றாக கூறப்படுவது திருப்பதி ஏழுமலையான் கோயில்.

'வீடு தேடி வரும் திருப்பதி பிரசாதம்...' 'ஆன்லைன்ல பணத்த pay பண்ணவங்களுக்கு...' - காத்திருந்த அதிர்ச்சி தகவல்...!

திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் எவ்வளவு புகழ் பெற்றவையோ அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதங்களும் பிரசித்தி பெற்றவை. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் கோவிலின் பிரசாதங்கள் வீடுதேடி வரும் எனக்கூறி பக்தர்களிடம் மோசடி செய்த 7 போலி வெப்சைட்களை உருவாக்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவிலின் தரிசன டிக்கெட்டுகளும், ஆன்லைன் மூலமாகவே பக்தர்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் திருப்பதி தேவஸ்தானம் வெப்சைட் போல், போலியாக வெப்சைட் தொடங்கி, 'வீடு தேடி வரும் திருப்பதி பிரசாதம்' என விளம்பரப்படுத்தினர். இந்த போலி வெப்சைட்களில் ஏராளமான பக்தர்கள் பணத்தை கட்டி ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

இதை அறிந்த தேவஸ்தான அதிகாரிகள், கடந்த 8-ம் தேதி திருப்பதி கிழக்கு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் 7 போலி வெப்சைட் நிறுவனங்கள் மீது திருப்பதி கிழக்கு நகர போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பக்தர்கள் போலி வெப்சைட்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று  தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்