'என் ஹெல்த் ரொம்ப மோசமா இருக்கு...' - கோர்ட்டுக்கு வந்து 'சரிதா நாயர்' சொன்ன 'அதிர்ச்சி' தகவல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கியுள்ள சரிதா நாயர், தன்னை எப்படி கொலை செய்ய முயற்சி நடந்தது என அதிர்ச்சி தகவலை வௌியிட்டுள்ளார்.

'என் ஹெல்த் ரொம்ப மோசமா இருக்கு...' - கோர்ட்டுக்கு வந்து 'சரிதா நாயர்' சொன்ன 'அதிர்ச்சி' தகவல்...!

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரை ஏமாற்றி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். அப்போது முதல் பல சர்ச்சையான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த வழக்கு கேரள அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று என்றே கூறலாம். 

saritha nair claims that there was an attempt to poison her

அவர் மீது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி, அப்போதைய அமைச்சர்கள் சேர்ந்து தன்னை பலாத்காரம் செய்ததாக கூறிய புகார் கேரள அரசியலில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியது.

இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு கொட்டாரக்கரை பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு கும்பல் வழிமறித்து அவரது காரை அடித்து நொறுக்கியது. பின்னர் அவரையும் தாக்க முயற்சி நடந்தது.

இந்த வழக்கு கொட்டாரக்கரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக சரிதா நாயர் நேற்றைய தினம் (16-12-2021) நீதிமன்றம் வந்தார். அப்போது அவர் கூறுகையில், 'எனக்கு விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடைபெற்றது.

ஆகவே எனது உடல் நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நான் தற்போது வேலூர் மற்றும் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வருகிறேன். உடல் நலம் தேறியதும் எனக்கு விஷம் கொடுத்தது யார்? என்பதை தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது கேரள அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

SARITHA NAIR, POISON, சரிதா நாயர், கேரளா, விஷம்

மற்ற செய்திகள்