VIDEO : "எனக்கு கண்டிப்பா நீதி கிடைக்கும்"... கண்ணீருடன் 'வீடியோ' வெளியிட்ட 'ரியா' சக்ரபோர்த்தி... பரபரப்பான கட்டத்தை எட்டும் 'சுஷாந்த் சிங்' தற்கொலை 'விவகாரம்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

VIDEO : "எனக்கு கண்டிப்பா நீதி கிடைக்கும்"... கண்ணீருடன் 'வீடியோ' வெளியிட்ட 'ரியா' சக்ரபோர்த்தி... பரபரப்பான கட்டத்தை எட்டும் 'சுஷாந்த் சிங்' தற்கொலை 'விவகாரம்'!!!

சுஷாந்த் சிங் மரணத்திற்கு பின்னால் சில பாலிவுட் பிரபலங்கள் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரின் முன்னாள் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி சுஷாந்த் இறந்து ஒரு மாதத்திற்கு பின்னர், சுஷாந்த் சிங் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று சில அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சுஷாந்த் சிங் தந்தை கே. கே. சிங் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள காவல் நிலையத்தில் ரியா சக்ரபோர்த்தி உட்பட ஆறு பேர் மீது சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்துள்ளார்.

மேலும், சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் இருந்து பல கோடி ரூபாயை ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் செலவு செய்து விட்டதாகவும் தனது புகாரில் கே.கே.சிங் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இன்று ரியா சக்ரபோர்த்தி தனது  காதலனை குறித்து பேசும் வீடியோ ஒன்று வெளியாகி மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக, நெட்டிசன்கள் மற்றும் சுஷாந்த் சிங் ரசிகர்கள் ரியாவுக்கு எதிராக கிளம்பினர். ரியாவுக்கு எதிராக பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது இந்த சம்பவம் குறித்து ரியா சக்ரபோர்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் கடவுளையும், நீதித்துறையும் அதிகமாக நம்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கும் என்றும் நான் நம்புகிறேன். என்னை குறித்து பல மோசமான  தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன. எனது வக்கீலின் அறிவுரைப்படி எதுவும் பேசாமல் இருக்கிறேன். உண்மை வெல்லும்' என தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங் தந்தை கே.கே சிங் புகாரளித்த பின்னர், சுஷாந் சிங் மரண விவகாரம் மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

மற்ற செய்திகள்