மாரடைப்பால் 'உயிரிழந்த' பெண்... "அவங்களோட காது, முகத்துல எல்லாம்"... 'அம்மா' உடலை வாங்க சென்ற மகளுக்கு,,.. 'மார்ச்சுவரி'யில் காத்திருந்த 'அதிர்ச்சி'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாப் மாநிலம், சண்டிகர் பகுதியை சேர்ந்தவர் அமர்ஜீத் சிங். முன்னாள் ராணுவ வீரரான இவரது மனைவி ஜஸ்ஜோத் கவுர், இருதய நோயாளியாக இருந்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பால் 'உயிரிழந்த' பெண்... "அவங்களோட காது, முகத்துல எல்லாம்"... 'அம்மா' உடலை வாங்க சென்ற மகளுக்கு,,.. 'மார்ச்சுவரி'யில் காத்திருந்த 'அதிர்ச்சி'!!!

தொடர்ந்து, அவரது உடல் மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அப்போது தாயின் உடலை பெற்றுக் கொள்ள அமர்ஜீத் சிங் மகள் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது தாயின் உடலைக் கண்ட மகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். காரணம், அவரது தாயின் உடலின் காது மற்றும் முகப் பகுதிகளில் காயங்கள் இருந்துள்ளது. அதே போல, அவரது உடலை சுற்றி ரத்த துளிகளும் இருந்துள்ளது. இது தொடர்பாக, அவர் மருத்துவமனையில் விசாரித்த போது நிர்வாகம் சரியான பதிலை தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து, தனது தந்தை அமர்ஜீத் சிங்கிடம் இதுகுறித்து கூறியுள்ளார். 'எனது தாயின் உடலை பெற்றுக் கொள்ள வேண்டி மருத்துவமனை சென்ற போது தாயின் காதுப் பகுதி மற்றும் முகத்தில் ஏதோ கடித்து வைத்தது போன்ற காயங்கள் இருந்தது' என தெரிவித்துள்ளார். மேலும், அவரது உடலில் இருந்து உடல் உறுப்புகளை மருத்துவமனை திருடியுள்ளதாகவும், அந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக, அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக, போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், அவரது உடல் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல் உறுப்புகளை திருடவில்லை என்றும், எலிகள் அவரது உடல் பகுதியை கடித்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்