Veetla Vishesham Mob Others Page USA

டிவில சேனல் வரலைன்னு மகனை தாக்கிய தந்தை.. கிச்சனுக்குள்ள இருந்து கோபமா வந்த மனைவி செஞ்ச காரியத்தால் பதறிப்போன உறவினர்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலத்தில் மகனை தாக்கிய கணவரை அவரது மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிவில சேனல் வரலைன்னு மகனை தாக்கிய தந்தை.. கிச்சனுக்குள்ள இருந்து கோபமா வந்த மனைவி செஞ்ச காரியத்தால் பதறிப்போன உறவினர்கள்..!

Also Read | அது என்ன வைரம் மாதிரி ஜொலிக்குது?...செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பொருள்.. வைரலாகும் புகைப்படம்..!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சந்த்லோடியா பகுதியில் வசித்து வந்தவர் விஜய் சிங் யாதவ். 45 வயதான இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். சமீபத்தில் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விஜய், சில நாட்களாக வீட்டில் இருந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய அவர், டிவியில் சில சேனல்கள் வரவில்லை என கோபப்பட்டதாக தெரிகிறது.

அதிர்ச்சி

இதனையடுத்து, விஜயின் மகன் அதனை சரி செய்ய சென்றிருக்கிறார். அப்போது, அவரை விஜய் தாக்கியதாக கூறப்படுகிறது. சமயலறையில் இருந்த விஜயின் மனைவி  கேட்டு ஓடிவந்து பார்த்தபோது விஜய் மகனை அடித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த பெண்மணி விஜயை தாக்கியுள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த குழந்தைகள் அருகில் வசித்துவந்த விஜய்யின் சகோதரர் ராஜேஷ் என்பவருக்கு போன் செய்து உடனடியாக வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளனர்.

வீட்டிற்கு விரைந்துவந்த ராஜேஷ், தனது சகோதரர் மரணமடைந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனையடுத்து சோலா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார் ராஜேஷ். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் விஜய்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். கொலை செய்த பிறகு வீட்டிலிருந்து வெளியேறி தலைமறைவான விஜய்யின் மனைவியை தேடும் பணியில் காவத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

Police arrested Ahmedabad woman Who attacked husband

வழக்கு

இந்நிலையில் நேற்று இரவே, காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளார் அந்த பெண்மணி. இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது கணவர் மகனை அடித்ததால் கோபமடைந்து அவரை தாக்கியதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து அவர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர். அகமதாபாத்தில் மகனை தாக்கிய கணவரை மனைவியே கொலை செய்த சம்பவ அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | இந்திய அணியில் இடமில்லை.. நொந்து போன இளம் வீரர் போட்ட ட்வீட்! ஆதரவுக்கரம் நீட்டிய ரசிகர்கள்

AHMEDABAD, POLICE, ARREST, WOMAN, ATTACK, HUSBAND, மனைவி, உறவினர்கள்

மற்ற செய்திகள்