'நைட் 8 மணிக்கு அவங்க வீட்டுக்கு போறேன்!'.. அனுராக் காஷ்யப் - பாயல் கோஷ் குற்றச்சாட்டு விவகாரத்தில்.. அடுத்த கட்ட பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னை பலவந்தப்படுத்தியதாகவும், மிகவும் மோசமான முறையில் நடந்ததாகவும், அதனால் அவர் அவர் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

'நைட் 8 மணிக்கு அவங்க வீட்டுக்கு போறேன்!'.. அனுராக் காஷ்யப் - பாயல் கோஷ் குற்றச்சாட்டு விவகாரத்தில்.. அடுத்த கட்ட பரபரப்பு!

பலரையும் அதிரவைத்த இந்த புகாரை அடுத்து அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்கள் எழுந்தன. அத்துடன் பாயல் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்திருந்தார்.

payal ghosh files complaint against Anurag kashyap

இதனிடையே, பாயல் கோஷ் தொடர்ந்திருந்த குறச்சாட்டுக்கு எதிராக அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று அனுராக் காஷ்யப்பின் வழக்கறிஞர் பிரியங்கா கிமானி அறிக்கை விடுத்திருந்தார்.

ALSO READ: "வீட்டுக்கு வர சொன்னார்னு .. நம்பி போனப்போ".. 'நயன்தாரா' பட வில்லன் நடிகரும், பிரபல இயக்குநருமான 'அனுராக் காஷ்யப்' பற்றி 'நடிகை' வெளியிட்ட 'பகீர் பாலியல்' புகார்!

இந்த நிலையில் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ், மும்பை, ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

payal ghosh files complaint against Anurag kashyap

புகார் அளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக பாயல் கோஷின் வழக்கறிஞர் இரவு 8 மணிக்கு பாயல் வீட்டுக்கு, தான் செல்லவுள்ளதாகவும், அங்கிருந்து ஓஷிவாரா காவல்நிலையம் சென்று அனுராக் மீது புகாரளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மற்ற செய்திகள்