“அண்ணன் சிரஞ்சீவி துப்பாக்கியால என் உயிரை மாய்ச்சுக்க முயன்றேன்” - ஓடிடி நிகழ்ச்சியில் பவன் கல்யாண் ஷாக் தகவல்.. Unstoppable 2 with NBK

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஓடிடி நிகழ்ச்சி `Unstoppable 2 with NBK'. நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் ஃபினாலே எபிசோடு ஆஹா தெலுங்கு ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பாகிறது.

“அண்ணன் சிரஞ்சீவி துப்பாக்கியால என் உயிரை மாய்ச்சுக்க முயன்றேன்” - ஓடிடி நிகழ்ச்சியில் பவன் கல்யாண் ஷாக் தகவல்.. Unstoppable 2 with NBK

Also Read | தொடரின் முதல் டெஸ்டிலேயே சதமடிச்சு அசத்திய ரோஹித்.. அடுத்த கணமே படைத்த உலக சாதனை..

இதில் சிறப்பு விருந்தினர்களாக தெலுங்கின் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்ட நிலையில், தற்போது இதன் இறுதி எபிசோடில் நடிகர் பவன் கல்யாண் பங்கேற்றிருந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்திருந்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா நிகழ்ச்சியை தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக தொகுத்து வழங்கினார்.

அப்போது இந்நிகழ்ச்சியில் பேசிய பவன் கல்யாண், தனக்கு இருந்த ஆஸ்துமா, அதன் காரணமாக அடிக்கடி மருத்துவமனைவாசம், இதனால் உண்டான தனிமை, என அனைத்தையும் கடந்து டீன் ஏஜில் தேர்வினால், ஏற்பட்ட மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றின் காரணமாக தான் விபரீத முடிவு உள்ளிட்ட பலவற்றையும் குறித்து மனம் திறந்து பேசினார்.

Pawan Kalyan battle with depression Unstoppable 2 with NBK

குறிப்பாக அந்த அழுத்தம் மிகுந்த நாட்களில், தனது மூத்த சகோதரரான சிரஞ்சீவி வீட்டில் இல்லாதபோது, அவரது உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்ததாகவும், அப்போது சரியான சமயத்தில் தனது சகோதரர் நாகபாபுவும் அவரது மனைவியும் வந்து தன்னை காப்பாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Pawan Kalyan battle with depression Unstoppable 2 with NBK

அதன் பிறகு இந்த விசயங்களை அறிந்த பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவி, “எனக்காக நீ வாழ்ந்தாலே போதும், வேற எதுவுமே நீ செய்ய வேண்டாம்” என பவனிடம் கேட்டுக்கொண்டதாகவும், அதன் பிறகு புத்தகங்கள் படிப்பது, கர்நாடக இசை, தற்காப்புக் கலைகள் உள்ளிட்ட பல பயிற்சிகள் மூலம் அதில் இருந்து வெளியேறியதாகவும் நடிகர் பவன் கல்யாண் இந்நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.

Pawan Kalyan battle with depression Unstoppable 2 with NBK

குறிப்பாக  “எச்சூழலிலும் மற்றவர்களுடன் உங்களை நீங்களே ஒப்பிட்டுக் கொள்ள வேண்டியதில்லை. உங்களுக்கு நிகர், உங்களுக்கு போட்டி நீங்கள்தான். கடின உழைப்பு இருந்தால் அறிவும் வெற்றியும் வந்துசேரும். இன்றைய உங்களது பொறுமையே, உங்களது எதிர்காலத்தை சிறப்பாக்கும்” என பவன் கல்யாண் தெரிவித்தார்.

Also Read | இளையராஜா இசையில், கிருத்திகா உதயநிதி இயக்கிய விழிப்புணர்வு பாடல்.! பாடிய யுவன்..

PAWAN KALYAN, UNSTOPPABLE 2 WITH NBK

மற்ற செய்திகள்