திடீரென பயணியின் பையில் இருந்து வந்த புகை.. நடுவானில் நடந்த அதிர்ச்சி.. அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென பயணியின் பையில் இருந்து வந்த புகை.. நடுவானில் நடந்த அதிர்ச்சி.. அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்..!

Also Read | அவ்ளோதான்.. இனி ‘அந்த’ CSK வீரரை நடப்பு ஐபிஎல் சீசன்ல பார்க்க முடியாது.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து டெல்லிக்கு இன்டிகோ பயணிகள் விமானம் நேற்று சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவரின் பையில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பையை திறந்து பார்த்தபோது அவரது செல்போன் வெடித்திருந்தது தெரியவந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனே விமான பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்தனர். விரைந்து வந்த அவர்கள் தீயணைப்பு கருவிகள் மூலம் செல்போனில் இருந்து வந்த தீயை அணைத்தனர்.

இதனை அடுத்து அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணியின் செல்போன் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | IPL-ல் மறுபடியும் நுழைந்த கொரோனா.. ‘ஒருவருக்கு பாசிடிவ்’.. வெளியான பரபரப்பு தகவல்..!

PASSENGER, PHONE, FLIGHT, PHONE CATCHES FIRE, MOBILE PHONE, INDIGO FLIGHT

மற்ற செய்திகள்